states

நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் கம்பெனியாக மாற்றிவிட்டனர்

சென்னை,ஜூன் 27-  “சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களுடைய கம்பெனியாக தீட்சிதர்கள் மாற்றிவிட்டதாகவும் கோவிலில் ஒரு உண்டியலை கூட பார்க்க முடியவில்லை” என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிதம்பரம்  திருக்கோயிலில், ஓர் அதிகார மையத்தை ஏற்படுத்திக் கொண்டு தீட்சிதர்கள் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அரசைப் பொருத்த வரையில், வழிபாட்டு முறைகளில்,  ஆதிகாலம் தொட்டு என்ன வழி பாட்டு முறைகள் பின்பற்றப்படு கிறதோ,அதில் துளியளவுகூட இந்து சமய அறநிலையத் துறை தலையிட்டு வழிபாட்டு முறைகளை மாற்றுகின்ற எண்ணம் இல்லை. அதே நேரத்தில், திருக்கோயில் கள் மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்டது. அதை டீனாமினேஷன் டெம்பி ளாக (சமயக் கோயில்) அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளில்  அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுடைய நன்கொடைகளால் இந்த கோயில் நடந்து கொண்டி ருக்கிறது.   இந்த கோயிலில்  ஒரு உண்டியல்கூட இல்லை. மற்ற கோயில்களில் பல உண்டியல்கள் இருக்கும். வரவு செலவு இருக்கும். இந்த கோயிலை இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து எடுக்கின்றபோது, அன்று கோயிலில் இருந்த ரொக்கப் பணம் எவ்வளவு என்பதை தணிக்கை  செய்வதற்குகூட  இதுவரை அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

அதேபோல், விலை மதிப்புள்ள தங்க நகைகள், திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்கள், தீட்சிதர்கள் திருக்கோயிலுக்கு பொறுப்பேற்றதற்குப் பிறகு இதுநாள் வரையில், எவ்வளவு தங்க நகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற  கணக்கைக்கூட அவர்கள் காண்பிக்க மறுக்கின்றனர். மேலும் இந்த காலகட்டங்களில் திருக்கோயிலின் வரவைப் பற்றி எந்தவிதமான தகவலையும் தெரிவிக்க மறுக்கிறார்கள். அந்தக் கோயிலை ஏதோ அவர்களுடைய சொந்த நிறுவனம் போல் பாவித்துக் கொண்டுள்ளனர். இதைத்தான் அரசு தட்டிக்கேட்கிறது. மக்கள் பணத் தால், மக்களுடைய முழு அர்ப்பணிப் பால் நடக்கின்ற இத்திருக்கோயிலில், மக்களுக்கும் அரசுக்கும் சேர்க்க வேண்டிய வெளிப்படையான தகவல் களைக் கூட கொடுக்க மறுக்கிறார் கள். கனகசபையின் மீதேறி பக்தர்கள்  வழிபடுவது குறித்து இந்துசமய  அறநிலையத்துறை முடிவெடுக்க லாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அறநிலையத்துறை சார்பில், கனகசபையின் மீதேறி  பக்தர்கள் தரிசனம் செய்ய அனு மதிக்க வேண்டும் என்று அரசு ஒரு ஆணையை பிறப்பித்திருக்கிறது. ஆனால், அவர்கள் திருமஞ்சனத்தைக் காரணம் காட்டி, ஜூன் 24 முதல் 27 வரையிலான 4 நாட்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு எந்த நடை முறையும் இல்லை. எனவே, இந்த 4 நாட்களும் நீதி மன்றத் தீர்ப்பின்படி, அரசாணையின் படி, கனகசபையின் மீதேறி பக்தர் கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.