நிதிஷ்குமார் கண்டனம் பாட்னா, ஜன. 27 - பீகார் போன்ற ஏழை மாநிலங்கள், தங் களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளன; அவ்வா றிக்கையில் கடன் வாங்குவதிலும் கூடவா மோடி அரசு தலையீடு செய்யும்? என்று முதல் வர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒரு மாநில முதல்வர் என்ன எதிர்பார்க்க முடியும்? பீகா ருக்கு ஒன்றிய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும் என்பதுதான். ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கைகளே இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. ஐக்கிய ஜனதாதளமும், பாஜக- வும் கூட்டணியில் ஒன்றாக இருந்தபோதும் அவர்கள் மாநிலத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர்கள் அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். ஏழ்மை நிலை யில் உள்ள மாநிலங்களை முன்னேற்றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி நினைக்கிறார்கள்? என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.