திருநெல்வேலி, ஏப் .21- உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணை யை சிபிசிஐடி காவல் துறையினர் வெள்ளியன்று துவங்கினர். நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய் யப்பட்ட உதவி போலீஸ் எஸ்.பி. பல்வீர் சிங் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் விசாரணை அதி காரி அமுதா சமர்ப்பித்த அறிக்கை யின் அடிப்படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படை யில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வெள்ளி க்கிழமை அனைத்து கோப்புகளை யும் பெற்றுக் கொண்டார். குற்றப் பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன் ரகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி உலக ராணி யிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி. அதிகாரிகள் குழு வெள்ளிக் கிழமையே தொடங்கியது.