states

குவைத்தில் மரணமடைந்த வாலிபர் உடல் தமிழகம் கொண்டுவரப்படுகிறது

சென்னை, செப்.15- குவைத்தில்சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்கு மரன் உடல் தமிழகம்  கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் லட்சு மண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் குடும்ப சூழல் காரண மாக கடந்த 3 ஆம் தேதி குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 9 ஆம்  தேதி அவர் மரணமடைந்து விட்டதாக அவரது குடும்பத் தினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டி ருப்பதாகவும், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறிய கூத்தாநல்லூர் வர்த் தக சங்கத்தினர், உறவினர் கள் மற்றும் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஊர்வலம் நடத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், முத்துக்குமரனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவரது மனைவி வித்யாவும்  கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவரது உடல் வெள்ளிக்கிழமை (செப்.16) தமிழகம் கொண்டு  வரப்பட வாய்ப்பு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

;