states

மதுரை எய்ம்ஸ்: மோடி அரசின் பொய் மீண்டும் அம்பலம்

சென்னை,பிப்.27- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்று 2015 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018 ஆம் ஆண்டு தோப்பூரில் இடம் தேர்வு  செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை கட்டுமான பணிக்காக  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன்  கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு  ஒப்புதல் வழங்கியதால் தற்காலிகமாக  ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி யில் வகுப்புகள் நடக்கின்றன. மதுரை  எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1,977.8 கோடியில் 82 விழுக்காட்டை  ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவ னம் வழங்கும். மீதியை ஒன்றிய அரசு  வழங்குகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க ஒன்றிய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.  இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு  பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மூன்று  ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  இதற்காக விசாலமான சாலை மற்றும்  சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப்  பணிகள் எதுவும் இன்னும் தொடங்க வில்லை.

இந்த நிலையில், நடந்து முடிந்த  தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்  பிரச்சாரத்தில், உதயநிதி ஸ்டாலின், “ எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒரு செங்கல் மட்டுமே மதுரையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.” அதனைத் தொடர்ந்து, கடந்த  ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர்  ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக” தெரிவித்தார். மேலும், முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 1,264 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் மீத முள்ள பணிகளை மிக விரைவில் முடித்து பிரதமரால் விரைவில் நாட் டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து, மதுரை, விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் (சிபிஎம்), மாணிக்கம் தாகூர் (காங்.) இருவரும் எய்ம்ஸ் மருத்து வமனையை தேடிப் பார்த்ததில் இந்த இடத்தில் இருந்த பெயர் பலகை யைக் கூட காணவில்லை.  ஒரே ஒரு செங்கல் இருந்தது. இப்போது அதையும் காணவில்லை என்றனர்.

இந்நிலையில், நடந்து முடிந்த  மக்களை கேள்வி நேரத்தின்போது  திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு  எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மதுரை எய்ம்ஸில் மருத்துவப் படிப்புகள் நடைபெற்று வரு கின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிழையான தகவல் களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன” என்றார். இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு இதுவரை எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின்  சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் திட்ட மதிப்பீடு ரூ.1,977.8 கோடியாகும். இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ.12.35 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி கள் நிறைவடையும் என்று கூறப்பட் டுள்ளது.