states

தமிழகத்தில் தட்டச்சு தேர்வுக்கு இடைக்கால தடை

உயர்நீதிமன்றம் உத்தரவு மதுரை, செப்.21-  தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என தனி நீதிபதி பிறப் பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு தாள்-1 தாள்-2 என்று 2 நிலைகளில் இருக்கும். கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு தேர்வும், தாள் - 2 ஸ்டேட்மெண்ட்- லெட்டர் தேர்வும் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியிடப் பட்ட தேர்வு அறிவிப்பானது இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1ல் லெட்டர் - ஸ்டேட்மெண்ட், தாள்-2 இல் ஸ்பீடும் இருக்கும் என்பது போன்று நிலையில் உள்ளது.

எனவே, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில் தாள்-1 இல் ஸ்பீட் தேர்வும், தாள் - 2 இல் ஸ்டேட்மெண்ட்- லெட்டர் தேர்வும் நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.  இதனை விசாரித்த தனி நீதிபதி தமிழ கத்தில் பழைய முறைப்படி தாள்-1ல் ஸ்பீடு  தேர்வும், தாள்-2ல் லெட்டர் & ஸ்டேட் மென்ட் தேர்வும் நடைபெறும் என உத்தர விட்டார். இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமை யாளர் பிரவீன் குமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத்  அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது.  அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால  தடை விதித்தும் வழக்கில் உத்தரவு பிறப்  பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு  நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

;