states

மியான்மரில் தவிக்கும் தமிழர்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை,செப்.21- மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தி யர்களையும் மீட்க தேவையான நடவ டிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென பிரதமருக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். இதுகுறித்து தலைமைச்செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பது வருமாறு:- “மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தி யர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை பிரத மரின் உடனடி கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். மியான்மரில் சிக்கித் தவிப்ப வர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலை களுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.

 ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் வகை யில் தாய்லாந்திலிருந்து மியான்ம ருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், அத்த கைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல் கள் வருகிறது. எனவே மியான்மரில் சிக்கித் தவிக்கும் 17தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளது. அவர்களை விரைவாக மீட்ப தற்கு அரசின் உதவியை நாடு கின்றனர். மியான்மரில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள நமது குடி மக்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக  மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக பிர தமரின் அவசரதலையீட்டை கோருவதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

;