states

img

12 மணி நேர வேலை குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை

12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக வரும் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த முடிவு.
கடந்த ஏப்ரல் 21 பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான வெள்ளியன்று (ஏப்.21) தமிழக சட்டமன்றத்தில் "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மசோதாவை நிறைவேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிமுகம் செய்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி,  பாஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இந்நிலையில் ஏப்ரல் 24 மாலை 3 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிநாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.