states

img

தமிழ்ப்புத்தாண்டு: சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கம் 

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு, விஷூ மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

அதன்படி, வருகிற 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து விரைவுவண்டி ரயில் எண்.06007 புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். 

17ஆம் தேதி இரவு 10.40 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் ரயில் எண். 06008 மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.