வேலூர் செப். 27 - வேலூர் விஐடியில் அனைவ ருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 2 மற்றும் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா விஐடி பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. அறக் கட்டளையின் உறுப்பினர் மயிலாம் பிகை குமரகுரு வரவேற்றார். விஐடி வேந்தர் முனைவர் கோ.விசு வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, 292 மாணவர்களுக்கு ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினார். பின்னர் அவர் பேசுகை யில், உயர்கல்வியில் தமிழ்நாடு முதன் மையாக உள்ளது. எந்த நாடு கல்வி யில் அக்கரை செலுத்துகிறதோ அந்த நாடுகள் வளர்ந்து விட்டன. கல்வி நாட்டையும், வீட்டையும் உயர்த்தும். எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டத்தை நாம் இங்கு செயல்படுத்தி வருகிறோம். கல்வி ஏழை மாண வர்களுக்கு முழுமையாக போய் சேர வேண்டும். அறக்கட்டளை மூலம் 10 ஆண்டில் கல்வி உதவி தொகை யாக 7 கோடியே 93 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. இதற்காக நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி. அரசு ஊழி யர்களும், அரசு பள்ளியில் பணி யாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்ப தில்லை. இந்நிலை மாற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இன்றும் ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி என்பது எட்டாக் கனி யாகத் தான் உள்ளது. நாம் கல்விக்காக செலவழிப்பது மிகவும் குறைவு. இலவ சங்களை தருகிறோம் எனக் கூறுப வர்கள், இலவசக் கல்வியை தரு கிறோம் எனக் கூறுவதில்லை. கல்வி யால் யார் யார் பின்தங்கியுள்ளார்களோ அவர்கள் பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ளனர். 1960இல் இந்தியா வும், தென்கொரியாவும் ஒரே நிலை யில் தான் இருந்தன. ஆனால் இன்று அவர்கள் பல மடங்கு முன்னேறி யுள்ளனர். அதற்கு காரணம் கல்வி. ஜப்பான். தென்கொரியா. சீனா இந்த மூன்று நாட்டில் உள்ளவர்கள் கடி காரத்தை பார்த்து வேலை செய்வ தில்லை. செய்யும் வேலையை எவ்வ ளவு நேரமானாலும் முடித்து விட்டுத் தான் செல்வார்கள். அந்த எண்ணம் நமக்கு வர வேண்டும். இதை மாற்றுகின்ற சக்தி மாணவர்களி டம்தான் உள்ளது. விஐடியில் படித்த மாணவர்கள் இன்று 84 நாடுகளில் பணி யாற்றுகிறார்கள் என்று தெரிவித்தார். விழாவில் அறக்கட்டளை செய லாளர் ஜெ.லட்சுமணன், பொருளாளர் கே.ஜவரிலால் ஜெயின், நிதிக் குழு தலைவர் எம்.வெங்கடசுப்பு, விஐடி பதி வாளர் முனைவர் டி.ஜெயபாரதி, உறுப்பினர்கள் கே.எம்.தேவராஜ் கே.எம்.ஜி.ராஜேந்திரன், என்.பாஸ்கரன் அஞ்சு சக்திவேல் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முன்னதால சிறந்த பயிற்று னர்களுக்கு வேந்தர் கோ.விசுவநாதன் சான்றிதழ்களை வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சுந்தர்ராஜ் நன்றி கூறினார். புலவர் வே.பதுமனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.