states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ராகுலுக்கு பாஸ்போர்ட் வழங்க சுப்பிரமணியசாமி எதிர்ப்பு

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில், அரசு இல்லம், தூதரக ரீதி யிலான அந்தஸ்து கொண்ட பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளும் அவரிடம் இருந்து பறிக்கப்  பட்டன. இந்நிலையில், புதிதாக பாஸ்போர்ட் வாங்க தடையில்லாச் சான்று கோரி தில்லி ரோஸ்  அவென்யூ நடுவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு புத னன்று விசாரணைக்கு வந்த நிலையில், “நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி  உள்ளிட்டோர் விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்குவதற்கு, அவருக்குத் தடையில்லா சான்று வழங்குவது முறையல்ல” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.

திரிணாமுல் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீது புகார்

“திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதி எம்.பி. மஹூவா மொய்த்ரா, தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் பங்குகள், கடனீட்டு  பத்திரங்களில் முதலீடு செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், தனியார் நிதி நிறு வனத்தில் 4,900 பங்குகள் (49 சதவிகிதம்) வைத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்று ஷரவண் குமார் யாதவ் என்பவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமா ருக்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும், மொய்த்ரா வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக, ஒன்றிய அரசின் நேரடி வரிகள் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆளுநராக இருப்பதால் சக்சேனாவை விசாரிக்கத் தடை!

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறைச் சம்பவங்களின்போது, சமூக செயற் பாட்டாளர் மேதா பட்கரை தாக்கியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாக கூடியதாகவும் வினய் குமார் சக்சேனா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால்,  21 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்பட்டபாடில்லை. இதனிடையே கடந்த 2022 மே மாதம், வினய் குமார் சக்சேனாவை, ஒன்றிய பாஜக அரசு திடீரென தில்லி துணைநிலை ஆளுநராக நிய மித்து விட்டது. இந்தப் பின்னணியில், பதவிக்காலத்தில் ஆளுநர்களை கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ எந்த நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு குஜராத் உயர்நீதிமன்றம் செவ்வாயன்று தடை விதித்துள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

மணிப்பூர் மாநிலத்தில், ‘மெய்டெய்’ மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த  மாதம் நாகா, குக்கி பழங்குடியினர் நடத்திய போராட்டம், அதற்கு பதிலடியாக மெய்டெய் மக்கள் நடத்திய பேரணி,  நூறுக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியது. ஆயி ரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பல ஆயிரக்கணக் கான வீடுகள், கடைகள், வாகனங்கள் எரித்து சாம்ப லாக்கப்பட்டன. நீண்ட முயற்சிக்குப் பிறகு சற்று அமைதி திரும்பியிருந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறை வெடித்தது. இதில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த தொய்ஜாம் சந்திரமணி என்ற இளை ஞர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக சபாநாயகராக  யு.டி. காதர் போட்டியின்றி தேர்வு!

கர்நாடக சட்டப்பேரவையின் 3 நாள் சிறப்புக் கூட்டம் திங்களன்று துவங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபா நாயகராக அறிவிக்கப்பட்ட ஆர்.வி. தேஷ்பாண்டே புதிய  உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே சபாநாயகர் பதவிக்கு, காங்கிரஸ் மூத்த  தலைவர் யு.டி. காதர் செவ்வாயன்று தனது வேட்புமனு வைத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்தும் யாரும்  மனுத்தாக்கல் செய்யாததால், யு.டி. காதர் கர்நாடக சபா நாயகராக புதனன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் கர்நாடக சட்டப்பேரவைக்கு முதன்முதலாக சிறு பான்மையினர் ஒருவர் சபாநாயகராகி உள்ளார்.

மொபைல் எண்ணைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது! 

சில்லரை வர்த்தக கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் எண்ணைத் தருமாறு வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும், அவ்வாறு தர  மறுத்தால் பில் போட முடியாது என வியாபாரிகள் நிறுத்துவ தாகவும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு  தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, வர்த்தக கடைகளின் இந்த நடவடிக்கையானது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாயமற்ற செயல் என வும், இவ்வாறு தகவல்களை சேகரிப்பது சரியல்ல என்று  கூறியிருக்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர்  ரோகித் குமார் சிங், வாடிக்கையாளர்கள் தங்களது செல்  போன் எண்களை தர வேண்டும் என்று சில்லரை வியா பாரிகள் வற்புறுத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கிறது

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தை யில், கடந்தாண்டின் மத்தியில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவிலும் எதிரொலித்த இத்  தட்டுபாட்டால் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனிடையே, தனியார் நிறுவனங்கள் கோதுமையை ஏற்று மதி செய்தால், உள்நாட்டில் தட்டுப்பாடு மேலும் அதி கரிக்கும் என்பதால், ஒன்றிய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்து 2022 மே மாதம் உத்தரவிட்டது. இந்நிலை யில், தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியா ளர்களைச் சந்தித்த, ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோஹித் குமார் சிங், கோதுமை ஏற்றுமதித் தடையை நீக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித் துள்ளார்.