states

கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 26 கடைசி

சென்னை, செப்.20- கால்நடை மருத்துவம் படிக்க விரும்பு வோர், விண்ணப்பப் பதிவு செய்வதற்கு இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் கடைசி தேதி செப்டம்பர் 26 என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப் பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரி களில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு  படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 580 இடங்களும், பி.டெக் படிப்பிற்கு 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல் வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரி களில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63  இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படு கின்றன. தமிழகத்துக்கு 517 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடு வளியில் உள்ள உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23 ஆம் கல்வியாண்டு மாண வர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணி  முதல் 26ம் தேதி மாலை 5 மணி வரை  விண்ணப்பிக்கலாம். பி.வி.எஸ்சி மற்றும் ஏ.ஹெச் படிப்பிற்கு இதுவரை 7,825 மாணவ-மாணவிகளும், பி.டெக்  படிப்பிற்கு 1,510 மாணவ-மாணவிகளும்  விண்ணப்பித்துள்ளனர் என பல்கலைக் கழகத்தின் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

;