சென்னை, ஜூன் 21- அமலாக்கத்துறையினரால் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்ய ப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவ மனையில், புதனன்று (ஜூன் 21) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. மருத்துவமனையின் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்து வர்கள் அடங்கிய குழுவினர் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் 3 ரத்தக்குழாய்களில் ஏற்பட்டி ருக்கும் அடைப்புகளை அவர்கள் அகற் றினர். மேலும் ஒரு அடைப்பு இருந்த தும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கும் சிகிச்சை மேற்கொண்டனர். இதன் மூலம் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீரானது. தற்போது அவர் மருத்துவர்கள் தொடர் கண்காணிப் பில் இருந்து வருகிறார். இது தொடர்பாக காவேரி மருத்துவ மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமை யில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு இதய அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரி வில் மருத்துவர்களின் தொடர் கண் காணிப்பில் உள்ளார். அறுவை சிகிச் சையின் மூலமாக அவரது ரத்த குழாய் களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட் டுள்ளன. அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள் ளது. செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ள ப்பட்ட அறுவை சிகிச்சை தொடர்பாக இதய நோய் சிகிச்சை நிபுணரான மருத்துவர் அருண் கூறுகையில், இதய அறுவை சிகிச்சை மேற்கொள் பவர்களுக்கு நல்ல ஓய்வு அவசிய மாகும். 3 மாதங்கள் வரையில் அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியதிருக்கும். இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 நாட்கள் வரை நல்ல ஓய்வு தேவை. அதே நேரத்தில் வாழ் நாள் முழுவதும் மருந்து, மாத்திரை களையும் சாப்பிட வேண்டும் என்றார்.