சமாஜ்வாதி முன்னாள் எம்.பி., சுட்டுக் கொலை
லக்னோ, ஏப். 13 - உத்தரப்பிரதேச மாநிலத் தில் கடந்த 2005-ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கு மற்றும் ராஜூ பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வழக்க றிஞர் உமேஷ் பால் வழக்கில் முக்கிய குற்றவாளியான சமாஜ்வாதி கட்சியின் முன் னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத் அகமது இருவரையும் வியா ழனன்று உத்தரப்பிரதேச அதிரடிப்படை போலீசார் என் கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீரங்கம் காப்பகத்தில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலி
திருச்சிராப்பள்ளி, ஏப்.13- திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்காவல் மாம் பழச்சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தை கள் காப்பகம் ஒன்று நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்காப்ப கத்தில் 2022 டிசம்பர் 7 அன்று பெயர் சூட்டப்படாத இரு மாத பெண் குழந்தை, 2023 ஜனவரி 19 அன்று 2 1/2 வயது குழந்தை நித்ரா, மார்ச் 23 அன்று ஆண் குழந்தை ஸ்டா லின் ஆகிய குழந்தைகள் மூச்சுத் திணறலால் உயிரி ழந்தன. இந்த நிலையில், புதனன்று இரவு பிரியா என்ற பிறந்து 57 நாட்கள் ஆன பெண் குழந்தையும், கார்குழலி என்ற 3 மாத பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா விடுத்துள்ள அறிக்கை யில், ‘‘ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க அரசு தாய்ப்பால் வங்கிகளை உருவாக்கி, அரசு மருத்துவமனையிலேயே அரசே குழந்தைகளை பரா மரிக்க முன்வர வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் மீதமுள்ள குழந்தைகள் பாது காப்போடு வளர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் 10 மசோதாக்களை நிறுத்தியுள்ள ஆளுநர்
திருவனந்தபுரம், ஏப்.13- கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கின்றன. கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களிலும், முந்தைய கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களி லும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். கேரள பொது சுகாதார மசோதா, கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் ஒன்று. காலநிலை மாற்றம் மற்றும் மனித-விலங்கு தொடர்புகளின் ஒரு பகுதியாக புதிய வைரஸ்கள், நோய்க்கிருமிகள், தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக மக்களை பாதுகாக்க வேண்டி யதன் அவசியத்தை உள்ளடக்கியது இந்த மசோதா. மேலும், முதி யோர், மாற்றுத்திறனாளிகள், படுத்த படுக்கையாக இருப்ப வர்கள், பெண்கள், குழந்தைகள், விருந்தினர் (வெளிமாநில) பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மசோதாவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மேலும் 50 சென்ட் வரை தனியார் வன நிலம் வைத்திருப்பவர் களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தனியார் வன கையகப் படுத்தும் மசோதாவிலும் ஆளுநர் கையெழுத்திடவில்லை.
சிறு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் கேரள தனியார் காடுகள் (ஒதுக்கீடு மற்றும் ஆக்கிரமிப்பு) சட்டம் 1971இல் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது மலைவாழ் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அபராதத்துடன் முறைப்படுத்த கேரள பஞ்சாயத்துராஜ் மற்றும் நகராட்சி சட்டங்களை திருத்தம் செய்ய நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக வல்லுனர்களை நியமிப்பதற்கான மசோதா, துணைவேந்தர் தேர்தலுக்கான தேடல் குழுக்கள் அமைப்பதற்கான மசோதாக்கள், சுய உதவிக் கல்லூரிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் மசோதாக்கள், லோக் ஆயுக்தாவைக் கொண்டு வர கேரள லோக்ஆயுக்தா திருத்த மசோதா. தகுதிகள் மற்றும் நியமனம் லோக்பால் சட்டம், கேரள பிஎஸ்சி (வக்ஃப் வாரியத்தின் கீழ் உள்ள பணியிடங்கள் தொடர்பான கூடுதல் செயல்பாடுகள்) ரத்து செய்தல் மசோதா போன்றவை கடந்த மூன்று கூட்டத்தொடர்களில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
சட்டமன்ற துளிகள்...
பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 11 அன்று விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி “ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் கிடைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐபிஎல் போட்டி களை நடத்துவது பிசிசிஐ. அவர் உங்களுக்கு நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர மாட்டார்கள். நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம்” என்றார். இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து (வியாழக்கிழமை ஏப்ரல் 13) சட்டப்பேரவையில் ஐபிஎல் போட்டி குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித் ஷா பெயரை குறிப்பிடு வது என்ன தகாத வார்த்தையா அது? என்றார். விமர்சனமோ, கேலியோ, கிண்டலோ செய்யவில்லை. மரி யாதைக் குறைவாக எதுவும் சொல்ல வில்லை. அப்படி சொல்லியிருந்தால் நானே நீக்கச் சொல்லிவிடுவேன். ‘திரு’ என்று சொல்லிதான் அமைச்சர் பேசியுள்ளார்” என்று பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு முகக் கவசம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் வியாழனன்று (ஏப்ரல் 13) கலந்து கொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள் ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு முகக் கவசம் அணிந்து வந்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலை வர் பேசும்போது அதனை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முக கவ சத்தை அணிந்து வந்ததாகத் தெரிவித்த னர்.
இது கேளிக்கை விடுதி அல்ல: பேரவைத் தலைவர் எச்சரிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவை வியாழனன்று(ஏப்.13) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, திமுக உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசி துணைக் கேள்வி எழுப்பி னார். அப்போது பேரவையில் பெரும் பாலான உறுப்பினர்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தனர். இதனை யடுத்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும். இது கேளிக்கை விடுதி இல்லை; சட்டமன்றம்” என்று கடிந்து கொண்டார்.
முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதியேற்பு
சென்னை, ஏப்.13- அம்பேத்கரின் 133 ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை (ஏப்.14) நாடு முழுவதும் கொண்டா டப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலக வளா கத்திலுள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் வியாழனன்று (ஏப்.13) ‘சமத்துவ நாள்’ உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக் காக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் காலை 10:45 மணி முதல் 11.15 வரை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இத்தாலியில் அவசர நிலை
ரோம், ஏப்.13- ஆறு மாத காலத்திற்கு அவசர நிலையை நடைமுறைப்படுத்தப் போவதாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி அறிவித்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக மக்கள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்த நுழைவைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க இத்தாலி திட்டமிட்டுள்ளது. அதற்கு உதவும் வகையில் அவசர நிலையை வரும் ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள். இதற்கான முன்மொழிவை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் சுமார் 3 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இத்தாலி மண்ணில் காலடி எடுத்து வைத்தனர் என்ற செய்தி இத்தாலி அரசை உலுக்கி விட்டது. மார்ச் மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களில் 5 ஆயிரம் பேர் இத்தாலிக்குள் வருவதற்காக எந்தவித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக நுழைந்தனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இத்தாலிக்கு இந்த நிகழ்வுகள் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மத்தியத் தரைக்கடல் வழியாக இந்த சட்டவிரோத நிகழ்வுகள் நடக்கின்றன. கள்ளத்தனமாக பயணங்கள் ஆபத்தானவையாகவும் உள்ளன. இப்படி வருபவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனியாகத் தங்க வைப்பதற்கான செலவும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அவர்களைத் திரும்பவும் அனுப்புவதில், பிற நாடுகளில் ஒத்துழைப்பு பெரும் அளவில் தேவைப்படுகின்றது. பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் உள்நாட்டு அவசரநிலையை நடைமுறைப்படுத்த இத்தாலி அரசு முன்வந்துள்ளது.
உலகச் செய்திகள்
அரபு நாடுகளான கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகியவை தங்கள் உறவுகளைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளன. பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் சச்சரவு இருந்து வந்தது. இப்பகுதியில் பல நாடுகள் தங்கள் உறவுகளைப் புதுப்பித்து வருகையில், இந்த இரு நாடுகளும் வளைகுடா ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நோக்கி பயணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைமை அலுவலகத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டில், தனது ஊழியர்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காட்டைக் குறைத்து விட்டதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஏராளமான வழக்குகளை நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியா, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நிலவும் ஆட்பற்றாக்குறையைப் போக்க முடிவு செய்திருக்கிறது. இரு துறைகளிலும் 21 ஆயிரத்து 200 ஊழியர்களை நியமனம் செய்யப் போகிறார்கள். தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 13 ஆயிரத்து 130 ஆசிரிர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறையைப் போக்க சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.