states

எஸ்.பி.வேலுமணி வழக்குகள்: இன்று உயர்நீதிமன்றம் விசாரணை

சென்னை,செப்.19- தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை செவ்வா யன்று (செப்.20) விசார ணைக்காக பட்டியலிடப்ப டும் என சென்னை உயர் நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள் ளது. அதிமுக ஆட்சிக் காலத் தில் சென்னை, கோவை மாந கராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப் போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப் பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி உயர் நீதி மன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன.

அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, “வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு வை தனி நீதிபதிதான் விசா ரிக்க வேண்டும் எனவும், வரு மான வரித்துறைக்காக ஆஜ ராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக் கூடிய ராஜூ என்பவர் ஆஜ ராகக் கூடாது” என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட் டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அடங்கிய  அமர்வே விசாரிக்கலாம். ஒன்றிய அரசு வழக்கறிஞ ரான ராஜூவே ஆஜராகலாம் எனஉத்தரவிட்டு விசாரணை யை தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு பட்டியலி டப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதி பதிகள் செப்.20 அன்று வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

;