மானேசர், அக். 17 - ஹரியானா மாநிலம், போரா காலனி லிருந்து, முஸ்லிம்கள் மூட்டை கட்டத் தயாராக வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தன் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் மிரட்டி யுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கான் நகரிலுள்ள போரா காலன் என்ற இடத்தில் 4 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மசூதிக்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்டோ ரைக் கொண்ட ஒரு கூட்டம், தொழுகை யில் இருந்த இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி யது. இந்தச் சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், குர்கானில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துக்களை, தான் பாராட்டுவதாக வும், குர்கானோடு இது முடிந்து விடாது, ஹரியானா மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற தாக்குதல் களை எதிர்கொள்ள அவர்கள் (முஸ்லிம்கள்) தயாராக இருக்க வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். குர்கானிலுள்ள மானேசரில் விஎச்பி-யின் ‘திரிசூல் தீக்ஷா’ நிகழ்ச்சி யை சுரேந்திர ஜெயின் முன்னின்று நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், “12-13 ஆண்டுகளுக்கு முன்பு, 3 முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே போரா காலன் கிராமத்தில் ஆடு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலத்தில் தொழுகை நடத்த அனுமதி கோரினர். மவுலியாக்களோ, பிற ஊர் களில் இருந்து வருபவர்களோ யாரும் அங்கு வரமாட்டார்கள் என்று அப்போது புரிதல் இருந்தது. ஆனால், தற்போது மெது மெதுவாக வெளியில் இருந்து வருகிறார்கள். அந்த இடத்தில் கற்கள் கொண்டு மசூதி கட்ட முயற்சிக்கின்ற னர்” என்று கூறியுள்ளார். மேலும், “போரா கலானில் நடந்தது நாளை குர்கான், மானேசர், ஹரியானா மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடக்க லாம். அவர்கள் (முஸ்லிம்கள்) முழு தேசத்தையும் மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களின் உடைமை களை மூட்டை கட்டத் தயாராக வேண் டும். அவர்களுக்கு பாடம் கற்பித்த போரா கலானின் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். இது இந்து தேசம்.” என்றுகுறிப்பிட்டுள்ளார்.