states

எம்.பி. நிதியை எடுத்து சொந்த வீடு கட்டியதுடன், மகனுக்கு திருமணமும் செய்துவைத்த பாஜக எம்.பி.,

ஹைதராபாத், ஜூன் 20- தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ், தனது மக னின் திருமணத்திற்கும், தனக்கு வீடு கட்டுவதற்கும் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி யை பயன்படுத்திக் கொண்ட தாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசி யிருக்கும் சயம் பாபுராவ்,  தனது தொகுதி வளர்ச்சி நிதி  எதற்கு பயன்படுத்தப்பட் டது? என்று பகிரங்கமாக உண்மையைப் போட்டு உடைத்  துள்ளார். “இன்று, வீடு இல்லை என்றால், மதிப்பு இல்லை,  எனவே வீடு கட்டுவதற்காக எனது தொகுதி வளர்ச்சி  நிதியைப் பயன்படுத்தி னேன். இதை எந்தத் தலை வரும் ஒப்புக் கொள்ள மாட்  டார்கள். நான் ஒப்புக்கொள் கிறேன். தவிர, என் மகன்  திருமணத்திற்கு தேவைப் பட்ட பணத்துக்கும் எம்.பி.க்  களின் நிதியைப் பயன்படுத்  தினேன். இதற்கு முன்னி ருந்த எம்.பி.க்கள் முழு வளர்ச்சி நிதியையும் ஏப்பம் விட்டார்கள். ஆனால், நான்  அப்படியல்ல; சிறிய பகுதி யைத்தான் எடுத்துக் கொண்  டுள்ளேன்” என்று பேசியுள் ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்  டிய எம்.பி. ஒருவர், தொகுதி  மக்களுக்கு வளர்ச்சித் திட்  டங்களை நிறைவேற்றுவ தற்காக ஒதுக்கப்பட்ட நிதி யை, தன்னிஷ்டத்திற்கு தனது சொந்தத் தேவை களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தியிருப்பதை ஏற்க முடியாது; அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. சயம் பாபுராவ், ‘துடும் டெப்பா’ என்ற ஆதிவாசி அமைப்பை நடத்தி வந்தவர்  ஆவார். ‘லவ் ஜிகாத்’ என்ற  பெயரில், முஸ்லிம் சமூகத்  திற்கு எதிராக வெறுப்பு ணர்வை ஊட்டிய இந்துத் துவா அரசியலின் பக்கம்  சாய்ந்ததால், ‘துடும்  டெப்பா’வில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். 2004- ஆம் ஆண்டு தெலுங்கானா  ராஷ்டிர சமிதி கட்சியில் (இப் போது பாரத் ராஷ்டிர சமிதி) சேர்ந்தார். அந்தக் கட்சியின் சார்பில் போத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பி னராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் 2006-ஆம்  ஆண்டு காங்கிரஸில் சேர்ந்த  அவர், அங்கும் நீடிக்காமல் பாஜகவில் இணைந்து,  கடந்த 2019 மக்களவைத் தேர் தலில் 59 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானார். இந்நிலையிலேயே, தொகுதி வளர்ச்சி நிதியைப்  பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டதாகவும், மகனுக்கு திருமணம் செய்து வைத்த தாகவும், மக்கள் மீது கொஞ்ச மும் அச்சமில்லாமல் பேசி  பரபரப்பை ஏற்படுத்தியுள் ளார்.