பிரதமர் மோடி இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் வருகை
சென்னை, ஜன. 16 - 2024ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடர், தமிழ்நாட்டில் ஜன வரி 19 முதல் 31 வரை வரை நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டி களை தொடங்கி வைப்ப தற்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சென்னை யில் இருந்து நேராக இராமேஸ்வரம் செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்யும் அவர், 20 அல்லது 21 தேதிகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!
ஸ்ரீநகர், ஜன. 16 - ஜம்மு-காஷ்மீரில் செவ்வாயன்று காலை 8. 53 மணிக்கு கிஷ்த்வார் பகுதி யில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கமானது 5 கி.மீ ஆழத்திலும், 76.70 நீளத்தி லும் ஏற்பட்டுள்ளது என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சேதங்கள் குறித்த தக வல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
ஜன.18-ல் 200 ஆண்டுகள் கடந்தும் மத ஒற்றுமையை போற்றும் அந்தோணியார் ஆலய பொங்கல் விழா
சிவகங்கை, ஜன.16- சிவகங்கை அருகே கண்டுப் பட்டியில் 200 ஆண்டுகள் கடந்தும் மத ஒற்றுமையை போற்றும் புனித அந்தோணியார் ஆலயப் பொங்கல் விழா ஜனவரி 18 அன்று நடைபெறு கிறது. இதையொட்டி ஜனவரி 19 அன்று மஞ்சு விரட்டு நடக்கிறது. சிவகங்கை கண்டுப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு 200 ஆண்டு களுக்கும் மேலாக பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதன்படி, ஜனவரி 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜனவரி 18 அன்று நடைபெறும் பொங்கல் விழாவில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராள மானோர் பங்கேற்பார்கள். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் ஊர் காவல் தெய்வமாக அந்தோணியார் உள் ளார். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், முதலில் அந்தோணி யார் ஆலயத்தில்தான் வழிபாடு செய்வர். மேலும் எங்கள் கிராமத்தில் விருந்தோம்பலை முக்கியமாகக் கருதுவோம். இதனால் நாங்களே வீதிகளில் நின்று வெளியூர்களில் இருந்து வந்தவர்களை அழைத்துச் சென்று தேதி பொங்கல் விருந்து வைப்போம்’’ என கிராம மக்கள் கூறுகிறார்கள்.
ஆந்திர மாநில காங். தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா!
மக்களவைத் தேர்தலு டன் ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதை யொட்டி, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே அறி வித்து விட்டார். தெலுங்கு தேசம் பிரதான எதிர்க்கட்சி யாக இருந்தாலும், காங்கி ரஸ், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் திட்டத்தில் உள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா மூலமாகவே காய் நகர்த்தத் துவங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் காங்கிரசில் சேர்ந்த ஒய்.எஸ்.ஷர்மிளா வை, ஆந்திர மாநில காங்கி ரஸ் கமிட்டித் தலைவராக நியமித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உட்பட குடும்பமே காங்கி ரஸ் பாரம்பரியத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.
“திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை”
திருக்குறள் மற்றும் திருவள்ளு வரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. வள்ளுவரின் நிறம் மனிதநேயம்தான் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி., சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தற்போது மும்மொழிக் கொள்கைக் கான தேவை எதுவுமே கிடையாது. மற்றொரு மொழி படிப்பது என்பது, அது அவரவருடைய விருப்பம். திருக்குறள் மற்றும் திருவள்ளு வரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளு வரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. அவருக்கு திருமணமாகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடை யாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது. இதை அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மதத்தை கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால் அதுதான் திரு வள்ளுவரின் நிறம். எனக்குத் தெரிந்து அடுத்த மனிதநேயத்தின் அடையாளம் பெரியார். வேண்டுமென்றால் வள்ளு வருக்கு கருப்பு நிறம் போடலாம்” என்று கூறினார்.
நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை, ஜன. 16- குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜனவரி 17 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது
திருச்சி, ஜன. 16- வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏற்றப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் திருச்சி விமான நிலை யத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பேட்டிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் சந்தே கத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த 3 பேர் தங்கள் கொண்டு வந்த லக்கேஜ் அட்டை பெட்டியில் தலா 40 கிராம் எடையுள்ள 30 தங்க நாண யங்களை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து தங்க நாணயங்களை பறிமுதல் செய்த அதி காரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு 76 லட்சம் எனக் கூறப்படுகிறது.