புதுதில்லி, ஜூலை 18- “இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்னையே தேர்ந்தெ டுப்பார்கள் என நம்புகிறேன்” என்று குடியரசுத் தலைவர் பத விக்கு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதி நிறைவடைவதை யொட்டி, நாட்டின் புதிய மற்றும் 15-வது குடியரசுத் தலை வரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்களன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநி லங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 120 எம்எல்ஏ-க்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலை யில், அவர்கள் நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங் மற்றும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி நாடாளு மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி கள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவர் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையில், இந்த தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் பொதுவேட் பாளர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் அரசியல் போராட்டத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை. அரசு நிறுவ னங்களுக்கு எதிராகவும் போராடுகிறேன். அவர் கள் (பாஜகவினர்) மிகவும் சக்தி வாய்ந்தவர் களாகி விட்டனர். கட்சிகளை அவர்கள் உடைக்கிறார்கள். மக்களை அவர்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். இதில், பணம் விளையாடுவதும் கூட நடக்கிறது. எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு இந்த தேர்தல் பாதை அமைக்கும். தேர்தலில் வாக்களிக்கும் அனை வரும் தங்கள் மனம் சொல்வதைக் கேட்டு வாக்க ளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், ஜனநாயகத்தை கா பாற்ற அவர்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் என்னையே தேர்ந்தெடுப்பார்கள் என நம்பு கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.