மதுரை, ஜூன் 28- மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்ஹாவில் தொழுகை நடத்து வதற்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு வில், திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும் மலை சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவி லுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந் துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்து வதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.நாளை (ஜூன் - 29) தொழுகை நடத்து வதற்கு தடை விதிக்க முடியாது” என்று தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.