சென்னை,செப்.29- ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வ லத்துக்கு அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமாவளவன் சார்பில், காவல் ஆணையர் அலுவலகத்தில், அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். மேலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனு மதி வழங்கி உயர் நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக இணைந்து சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத் துக்கு ஆதரவளிக்கும்படி அனைத்து அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் மனித சங்கிலிப் போராட்டத் தில் பங்கெடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் இரவு-பகல் பாராமல், பாதுகாப்பு பணிக ளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்டோபர் 2 ஆம் தேதி யன்று அனுமதி கோரப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலம் விசிக மனித சங்கிலி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று அரசு உத்தர விட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் சீராய்வு மனு வியாழனன்று(செப்.29) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ‘பிரண்ட் ஆப் இந்தியா’அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடை பெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனு மதி அளிக்க இயலாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரப்பட் டுள்ளது. இந்த மனு விரைவில் விசார ணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.