பாகேபள்ளி (பெங்களூரு), செப்.19- மோடி அரசை அகற்றுவோம் என்கிற முழக்கத்துடன் தேசிய அள வில் நடத்தப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிபிஎம் கர்நாடக மாநிலக் குழு ஞாயிற்றுக்கிழமை (செப்.18) பாகேபள்ளியில் மாபெரும் பேர ணியை நடத்தியது. பேரணியை கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும், கேரள முதல்வருமான பின ராயி விஜயன் துவக்கி வைத்தார். ஞாயிறன்று காலை 11 மணிக்கு பாகேபள்ளி தேசிய கல்லூரி மைதா னத்தில் துவங்கிய பேரணி இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மதியம் 12 மணிக்கு கேஎச்பி லே அவுட் காலனி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சங்கமித்தது. அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் எம்.ஏ.பேபி, பி.வி.ராகவலு, மாநில செயலாளர் யு.பசவராஜ், மூத்த தலைவர் வி.ஜே.கே.நாயர் உள்ளிட் டோர் பேசினர். ஐடி ஊழியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் கள் குடும்பத்துடன் பேரணியில் பங்கேற் றனர். அடுத்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய பேரணி தேர்த லுக்கான முன்னோட்டமாகவும் அமை ந்தது.
பாகேபள்ளி சட்டப்பேரவை தொகு தியில் 1994 மற்றும் 2004 ஆம் ஆண்டு களில் சிபிஎம் தலைவர் ஜி.வி.ஸ்ரீராம ரெட்டி வெற்றி பெற்றார். காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளுக்கு கணிச மான செல்வாக்கு உள்ள தொகுதியில் சிபிஎம்- க்கு சுமார் 32 சதவிகிதம் வாக்கு கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் சிபிஎம் இரண்டாவது இடத்தைப் பெற்றது. நான்குமுனைப் போட்டியில் பாஜக இரண்டு சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிக்க பாஜக வாக்குகளை மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கர்நாடக முதல்வருடன் சந்திப்பு
முன்னதாக பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை யை கேரள முதல்வர் பினராயி விஜ யன் சந்தித்தார். கேரள அரசின் கே-ரயி லின் சில்வர் லைன் திட்டத்தை மங்களூரு வரை நீட்டிப்பது உட்பட பல்வேறு போக்குவரத்து திட்டங்கள் குறித்து விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.