states

img

சாதிக்கோட்டைகள் தகர்க்கப்படும் தேசாபிமானி பேட்டியில் பி.சம்பத்

கண்ணூர், ஏப். 9- தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக எப்போதும் போராட் டங்களுக்கு தலைமை வகித்தது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். கட்சி யின் தலைமையில் உருவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக நடத்திய போராட்டங்கள் அனை வரின் கவனத்தையும் பெற்றது. அதே நேரத்தில் பட்டியலின - பழங்குடியின மக்கள் இப்போதும் ஒடுக்குமுறையை சந்தித்து வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும். அதில் சிபிஎம் முன்னணி வகிக்கும், என்றார் சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத். ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் வேண்டும். வழக்கமான சட்டத்தின்படிதான் தற்போது இத்தகு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. சட்ட நடைமுறைகள் மிகவும் நீண்ட நெடிய போராட்டமாகவே உள்ளன. தனிச்சட்டத்திற்காக சிபிஎம்மும் இடது சாரி கட்சிகளும் போராடி வருகின்றன. இப்பிரச்சனையில் தமிழக அரசு பயனுள்ள வகையில் தலையிட வேண்டும்.  தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக முறையிலான போராட்டங்களில் தமிழ்நாட்டிற்கு பெரும் வரலாறு உள்ளது. மதுரை மாவட்டம் உத்தப்புரம் தீண்டாமைச்சுவரைத் தகர்க்க இரண்டு வருடம் நீடித்த போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. அன்று சிபிஎம் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் காரத் உத்தப்புரம் வருவதை அறிந்து முதல்நாள் இரவு அரசு தலையிட்டு சுவர் அகற்றப்பட்டது.

இதற்கு மேலும் அந்த சுவர் நீடித்தால் அது தமிழ்நாட்டுக்கு அவமானம் என அன்று முதல்வராக இருந்த கரு ணாநிதி கூறினார். இந்த நிகழ்வு தலித் மக்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தை எழுப்பியது.  சிபிஎம் தலைமையில் வர்க்க-வெகு ஜன அமைப்புகளின் பங்கேற்புடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயல்படு கிறது. போராட்டங்களிலும் இயக்கங்க ளிலும் அனைத்துப் பகுதியினரும் பங்கேற்கிறார்கள். தலித் அமைப்புக ளும், சமூகமும் இவ்விசயத்தில் சிபிஎம்முக்கு நன்றி தெரிவிக்கின்றன. வகுப்புவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளுக்கு  துணையாக திமுக உள்ளது. தில்லி யில் நடந்த நிகழ்ச்சியில் இதை வெளிப் படையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வகுப்புவாதத்துக்கும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைபாட்டை மேற்கொள்பவர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் எந்தவகையிலாவது நுழைந்துவிட வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. பல்வேறு பிரச்ச னைகளில் மதரீதியாகவும் சாதிய ரீதி யாகவும் மோதலை உருவாக்க அவர்கள் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர். பாஜகவின் இந்த அணுகுமுறை குறித்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கு நல்ல புரிதல் உள்ளதால் அவை எச்ச ரிக்கையாக உள்ளன என்று தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் முதல் ஒருங்கி ணைப்பாளருமான சம்பத் கூறினார். தேசாபிமானிக்காக விஜேஷ் சூடன்,  தமிழில் சி.முருகேசன்