தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் திறப்பதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு.
விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
விழுப்புரம் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.