states

கடலுக்கு அடியில் ராமர் பாலம் கட்டியதற்கு துல்லியமான ஆதாரங்கள் இல்லை!

புதுதில்லி, டிச. 23 - இராமேஸ்வரம் - தலை மன்னார் இடையே உள்ள திட்டு களை “சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்ச சொச்சம் என்றோ கூற முடியாது” என ஒன்றிய பாஜக அரசு தெரி வித்துள்ளது.  மேலும், இந்திய விண் வெளித்துறை செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்ததில் ‘ராமர்  பாலம் இருந்தது என்று துல்லிய மாக கூற முடியவில்லை’ என்று அது ஒப்புக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் இராமேஸ் வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே இயற்கையாக அமைந்த மண் திட்டு உள்ளது.  ஆனால், இந்த மண் திட்டானது,  இதிகாச கதையில் வரும் ராமர்,  ராவணனிடம் இருந்து தனது மனைவி சீதையை மீட்டு வருவதற்காக இலங்கைக்கு கட்டிய பாலம் என்று சங்-பரி வாரங்கள் கூறி வருகின்றன. அதனடிப்படையில், இந்த நீரிணைப் பகுதிக்கு ராமர் பாலம் என்று அவர்களாகவே பெயர் சூட்டிக் கொண்டதுடன், மண் திட்டை தேசியச் சின்ன மாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.  முன்னதாக, இந்த மண் திட்டிற்காக, மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி நீரிணைப்பை இணைக்கும் வகையில் 83 கி.மீ. ஆழத்துக்கு கால்வாய் வெட்டும் சேது சமுத்திரத் திட்டத்தையும் அவர்கள் முடக்கிப் போட்டனர்.  இதனிடையே, ராமர் பாலம் என்று கூறிக்கொள்ளும் மண் திட்டை தேசியச் சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில்தான், “தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் கட வுள் ராமர் கட்டியதாக நம்பப் படுகிற பாலம் இருக்கிறது என்ப தற்கான துல்லியமான ஆதா ரங்கள் எதுவும் இல்லை” என மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

ராமர் பாலம் பற்றிய ஆய்வு முடிவுகள் குறித்து, ஹரி யானாவைச் சேர்ந்த மாநி லங்களவை உறுப்பினர் கார்த்திகேய சர்மா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பி யிருந்தார். அவரின் கேள்வி களுக்கு விண்வெளி மற்றும்  அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந் திர சிங் பதில் அளித்துள்ளார். அதில், “பண்டைய காலம் பற்றிய தகவல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப் படுகின்றன. தொழில்நுட்பங் களை பயன்படுத்தி ஹரப்பா நாகரிகம் பற்றிய தகவல்களை கண்டுபிடித்துள்ளோம். ஆனால், 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளது. இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே உள்ள திட்டுகளை சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்ச சொச்சம் என்றோ கூற  முடியாது. இந்திய விண்வெளித் துறை செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் இருந்தது என்று துல்லியமாக கூற முடியவில்லை. வரலாற்றின்படி 56 கி.மீ. நீளத்துக்கு பாலம் இருந்ததாக நாம் கருதுகிறோம். எனினும் தொடர்ச்சியாக காணப்படும் சுண்ணாம்புக்கல் திட்டுகளை கொண்டு சில முடிவுகளுக்கு வரக்கூடும். ஒரே வாக்கியத்தில் கூறுவதென்றால் இராமேஸ் வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என் பதை கூறுவது கடினம். எனி னும் ஏதோ ஒரு கட்டுமானம் இருந்ததற்கான நேரடியான அல்லது மறைமுகமான குறியீடுகள் இருப்பதாக கூற லாம்” என்று தெரிவித்துள்ளார்.