சென்னை, ஏப்.25- தமிழ்நாட்டில் தற்போது 20-க்கு மேற்பட்ட மாநகராட்சிகள், 100-க்கு மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் 400-க்கு மேற்பட்ட பேரூ ராட்சிகள் உள்ளன. இந்நிலை யில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான புதிய விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள் ளது. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதி களை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது. இதன்படி, மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூராட் சிகள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள் ளன. மாநகராட்சிகளில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ளவை சிறப்பு நிலை மாநகராட்சியாகவும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ளவை தேர்வு நிலை மாநகராட்சியாகவும், 3 முதல் 5 லட்சம் வரை உள்ளவை முதல் நிலை மாநகராட்சியாகவும், 3 லட்சம் மக்கள் தொகை வரை உள்ளவை 2 ஆவது நிலை மாநக ராட்சியாகவும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. நகராட்சிகளில் 15 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நகராட்சி கள் சிறப்பு நிலை நகராட்சிகளா கவும், 9 கோடி முதல் 15 கோடி வரை வருவாய் உள்ள நகராட்சி கள் தேர்வு நிலை நகராட்சியாக வும், 9 முதல் 6 கோடி வரை வருவாய் உள்ள நகராட்சிகள் முதல் நிலை நகராட்சியாகவும், 6 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நகராட்சிகள் 2 ஆவது நிலை நகராட் சியாகவும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. மேலும், 80 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் 2.25 லட்சத் திற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்க ளும், 30 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சிலர்களும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.