புதுதில்லி, மே 20- 2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவ தன் மூலம் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நட வடிக்கை பேரழிவினைத்தரும் என்று கூறப் பட்ட குற்றச்சாட்டு இப்போது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஒன்றிய அரசாங்கம், 2000 ரூபாய் நோட்டை புழக்கத்திலிருந்து திரும்பப்பெற் றுக்கொள்வதற்காக எடுத்திருக்கும் முடிவு குறித்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டு களை புழக்கத்திலிருந்து விலக்கிக்கொண்டி ருக்கிறது. இந்த முடிவானது, மோடி அர சாங்கமானது 2016இல் கறுப்புப்பணம், ஊழல், பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக் கப்படுவது மற்றும் டிஜிட்டல் பொருளாதா ரத்தை ஊக்குவித்தல் ஆகிய பிரச்சனை களுக்கு 2016 பணமதிப்பிழப்பு அறிவிப்பு முடிவு கட்டும் என்று கூறியது உண்மையில் தலைகீழாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. இது எல்லா வகையிலும் மோசமான முறையில் தோல்வியடைந்துவிட்டது. முந்தைய அனு பவங்களின் அடிப்படையில் பார்த்தாலும், இப்போது 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதன் மூலம், கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகச் சொல்வ தும்கூட, முந்தைய நடவடிக்கையை சட்டப் பூர்வமானதாக்குவதற்கான நடவடிக்கையே. மோடியின் இந்த நடவடிக்கை,
கோடிக் கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பதற்கும், நூற்றுக்கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்வதற்கும், பொருளா தார நடவடிக்கைகளையும், வேலைவாய்ப்பு களைப் பெரிய அளவிற்கு அளித்து வந்த சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளை யும் அழிப்பதற்கும் இட்டுச்சென்றது. மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தையும் கடுமை யாகப் பாதித்தது. மோடியின் பணமதிப்பிழப்பு நட வடிக்கைக்குப்பின், ரொக்கப் புழக்கம் (cash in circulation) என்பது 83 விழுக்காடா கும். ஊழல் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகி யிருக்கின்றன. முன்பைவிட பல மடங்கு அதி கரித்திருக்கிறது. மிகவும் கண்டிக்கத்தக்க தான அப்பாவி மக்களைப் பலியாக்கிடும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கின் றன. நம்முடைய பொருளாதாரத்தை மோடி அழிப்பதும், நாட்டின் சொத்துக்களைச் சூறை யாடுவதும் தடுத்து நிறுத்தப்பட்டு முறி யடிக்கப்பட வேண்டும். மதவெறியர்கள் கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுடன் கொண்டிருக்கும் கள்ளப்பிணைப்பு நிரா கரிக்கப்பட வேண்டும். இத்தகைய எதேச்சதி கார தன்னிச்சையான மக்கள்விரோத நட வடிக்கைகளிலிருந்து நம் பொருளாதா ரத்தைக் காப்பாற்றிட, மக்கள் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)