states

பிபிசி ஆவணப்படம் கேரளத்தில் திரையிடப்பட்டது

திருவனந்தபுரம், ஜன.25- குஜராத் இனப்படுகொலையில் நரேந் திர மோடியின் பங்கு குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை இந்திய மாணவர் சங்க மும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும்  இணைந்து கேரளம் முழுவதும் திரை யிட்டன. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடந்த இனப்படுகொலை குறித்த ஆவணப்படத்தை இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பிபிசி  வெளியிட்டுள்ளது. இதன் முதல் பகுதி கடந்த வாரத்தில் வெளியானதும் அதிர்ச்சி  அடைந்த ஒன்றிய அரசு அதை இந்தியா வில் ஒளிபரப்பவோ சமூக ஊடகங்களில்  வெளியிடவோ கூடாது என தடை விதித் தது. இந்நிலையில் ஆவணப்படத்தில் இரண்டாம் பகுதி திங்களன்று (ஜன.23) இந்தியா தவிர பிற நாடுகளில் வெளியி டப்பட்டது. இந்நிலையில் இந்திய மாணவர் சங்க மும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும்  இணைந்து மோடி மீதான பிபிசியின் கேள்விகள் அடங்கிய ஆவணப் படத்தை திரையிட்டன. மகாராஜாஸ் கல்லூரி, எர்ணாகுளம் சட்டக் கல்லூரி, குசாட் மற்  றும் காலடி கலாச்சார பல்கலைக் கழக  கல்லூரிகளில் பெரிய திரையில் காட்சி படுத்தப்பட்டது. இதுபோல் கேரளம் முழு வதும் உள்ள கல்வி வளாகங்களில் பிபிசி ஆவணப்பட திரையிடல் தொடர்கிறது.  பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள சூழலில் இந்த  திரையிடல் நடைபெறுகிறது. ஆவ ணப்படத்தின் இரண்டாம் பாகம், அதி காரத்தை தக்கவைக்க நரேந்திர மோடி அரசு எடுத்து வரும் முஸ்லிம் விரோத நிலைப்பாடு பற்றியது என்று பிபிசி குறிப்பிட்டிருந்தது.

எம்.வி. கோவிந்தன்

பிபிசி ஆவணப்படங்கள் தடைசெய்யப்  பட்ட ஜனநாயக விரோத நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள  மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கண்  டனம் செய்துள்ளார். ஜனநாயக சமு தாயத்தில் கருத்துக்களை மறுக்க வேண்  டாம் எனவும், அத்தகைய நடவடிக்கை களுக்கு எதிராக மக்கள் குரல் வலுப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.