இந்தியாவில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை கடந்துவிட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுருத்தியுள்ளார்.
- பொதுமக்கள் காலை 11 முதல் மாலை 3 வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம்.
- வெயிலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் 104,108 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
- நீர் மர்றும் நீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் பருத்தி ஆடை அணிய வேண்டும், காலில் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டாம்.
- மாம்பலம் , வாழை, தர்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனை தொடற்பாக 94440-42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
- புகாரில் உண்மை கண்டறியப்படும்போது லகடைகளுக்கு சீல் வைக்கப்படுவதோடு உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்ட விதி கடுமையாக பின்பற்றப்படும்.