states

img

கே.எம்.வழியில் நடைபோடுவோம்!

மாணவப் பருவத்திலேயே மார்க்சிய  ஞானம் பெற்றவர் தோழர் கே.முத்தையா பல்கலைக் கழகத்தில் பயின்றாலும் பாட்டாளி அரசியலை தேர்ந்தவர் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை செயலாளராக செயல்பட்டவர் ‘ஜனசக்தி’ யின் பொறுப்பாசிரியராக இதழியல் பணியில் ஈடுபட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதிப்பு மிகு தலைவர்களில் ஒருவர் தீக்கதிர், செம்மலரின் நீண்டகால ஆசிரியர் பாமர மக்களும் படிக்கும் வண்ணம் பத்திரிகையில் எழுதிட வழிகாட்டியவர் மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர் நாடகாசிரியர், இலக்கிய ஆய்வாளர் தமுஎகச-வின் தனித்துவ தலைவர் பாரதி, பாரதிதாசன் - பட்டுக்கோட்டை பாதையில் நடைபோடச் செய்தவர் வைர விழா காணவிருக்கும் தீக்கதிர் அவர் வழியில் முன்னேற உறுதியேற்போம்.