மதுரையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
மதுரை, மே 21- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி களை யாரும் ஆக்கிரமித்து விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று மதுரையில் வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரி வித்தார். மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி இடையப்பட்டி கிராமத்தில் வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடை (Nature Walk) பயணத்தை மே 21 ஞாயிறன்று தொடங்கி வைத்து பங்கேற்றனர். இந்நிகழ்வில் வனத்துறை அமைச் சர் டாக்டர் மா.மதிவேந்தன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இருக்கிற பாரம்பரிய பல்லுயிர் இடங்களில் சில நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அதனையொட்டி இவ் வருடம் இடையபட்டியை தேர்வு செய்து இங்கு இருக்கிற கடம்பவன பகுதியில் பல்வேறு பல்லுயிர்கள் இங்கு இருக்கிறது. இதன் முக்கி யத்துவத்தை மக்கள் அறிகின்ற வகை யில் இங்கு நடைபயணம் மேற் கொண்டுள்ளோம். இங்கு பல்வேறு மரங்கள், பல்வேறு மூலிகை செடி கள், பல்வேறு பறவைகள், பூச்சிகள், தேவாங்கு உள்ளிட்ட பல்வேறு உயி ரினங்கள் வசிக்கும் பகுதியாக இருக்கி றது.
இடையபட்டி கோவில் காடுகளில் வாழும் விலங்குகளும், பறவை களும், அரிய வகை மரங்களும் பூமி யில் வாழும் நம்மோடு ஓர் அங்கம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் பசுமை நடை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே சமவெளி காடு களில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கி றது. இந்த பகுதிகளில் கடம்ப மரம் மட்டுமல்லாது உசிலை, குருந்தம், நெய் குருந்தம், குறிச்சி, அழிஞ்சல் மற்றும் பூவந்தி போன்ற மரங்களும் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது மருத்துவ குணம் கொண்ட மூலிகை களும், தேவாங்கு, முள்எலி, எறும்பு திண்ணி, புள்ளிமான் மற்றும் காட்டு பன்றி உள்ளிட்ட அறியவகை உயிரி னங்களும் இங்கு இருக்கின்றன. அத னால் இப்பகுதியை பாதுகாக்க வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கருதியும், தற்போதைய வளர்ச்சியை கருதியும் எக்காரணத்தை கொண்டும் இங்கு உள்ள காட்டுப்பகுதிகள் அழிந்துவிடாமல், இங்குள்ள பல்லு யிர்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதன் முக்கியத்து வத்தை உணர்த்தும் வகையில் பொது மக்களுடன் இணைந்து 1 மணிநேரம் நடை பயணம் மேற்கொண்டோம். முதலமைச்சர் வனங்கள், நீர் ஆதாரங்கள், நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம், ஈரநில இயக்கம் போன்ற இயக்கங்களை உருவாக்கி பல்வேறு இடங்களை பாதுகாத்து வரு கிறார்கள். தமிழ்நாடு வனத்துறை சார் பாக அரிட்டாபட்டி என்கிற ஊரை முதன்முறையாக பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்துள்ளோம், மேலும் பல்வேறு இடங்களை கண்டறிந்து வருகிறோம் .
தெரிந்தோ, தெரியாமலோ பாது காக்கப்பட்ட வனப்பகுதிகளை அரசோ, தனியாரோ ஆக்கிரமித்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். மதுரை மத்திய சிறையை இடையப்பட்டிக்கு மாற்றியது குறித்து எதிர்ப்பு எழுந்துள்ளது. அது குறித்து கிராம மக்களும் மனுக்கள், கோரிக்கை களை தெரிவித்துள்ளனர். வேறு மாற்று இடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து மாவட்ட நிர்வா கத்தோடு கலந்து பேசி முதல்வரிடம் உறுதியாக எடுத்துரைக்கப்படும். ஒரு மாற்றம் இருக்கும் என நம்புவதாக வும் தெரிவித்தார். வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தலாம். விதி களை பின்பற்ற வேண்டும். வன விலங்குகளுக்கு அதனால் ஆபத்து வரக்கூடாது. விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் மற்றும் வன பாதுகாவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.