states

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை,செப்.16- கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளா ளர் உள்ளிட்டோருக்கு வழங்கப் பட்ட ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர்,செயலாளர், முதல் வர் மற்றும் இரண்டு பெண்  ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டு, பின்னர் ஆகஸ்ட் 26  அன்று  நிபந்தனை ஜாமீன்  வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த  உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தி னம் தலைமையில், 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத் தக்கது அல்ல. “மாணவி தற் கொலை” தான் செய்து கொண்டார் என்று நீதிபதி தனது  விரிவான உத்தரவில் தெரிவித் துள்ளார். விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிலை யில், நீதிபதி தெரிவித்துள்ள இந்த உத்தரவு உச்சநீதி மன்றத்தின் சட்ட விதிகளை மீறிய செயலாகவே உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையிட்டார். வேறொரு நாளில் முறையிடுமாறு நீதிபதி கள் அறிவுறுத்தினர்.

;