சென்னை,டிச.12- இந்தியாவிலிருந்து இலங்கை யிலுள்ள கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத் திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத் திற்கு தமிழ்நாட்டிலிருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன. இதை யடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து யாழ்ப் பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரண மாக சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை திங்கட்கிழமை(டிச.12) முதல் மீண்டும் தொடங்கியது.
ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனமே இந்த சேவையை மேற்கொள்கிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 64 இருக்கை கள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. முதல் நாள் என்பதால் 12 பேர் மட்டுமே சென்ற னர். காலை 10.15 மணிக்கு தாமத மாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப் பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள், தற்போது திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என்று 4 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தி லிருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பா ணம் விமான நிலையம் சென்ற டைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது. சென்னையிலிருந்து யாழ்ப் பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.