states

கடைகள்-நிறுவனங்கள் திருத்த சட்ட மசோதா அறிமுகம்

சென்னை,ஏப்.13- , கடைகள் மற்றும் நிறுவனங்க ளில் பணிபுரியும் நபர்களின் வேலை நேரம், வார ஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள்   சட்டதிருத்தத்தை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  தாக்கல் செய்தார். அதில், ஒன்றிய அரசின் தொழிலா ளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது, கடைகள் மற்றும்  நிறுவனங்களில் பணிபுரியும் தொழி லாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும்  பணி நிபந்தனைகளை ஒழுங்கு படுத்துவதற்காக, 2016 ஆம் ஆண்டு  மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள்  (வேலைவாய்ப்பு மற்றும் பணி  நிபந்தனைகளை ஒழுங்குப்படுத் துதல்) சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது

. மற்றும், மாதிரி சட்ட முன்வடிவினை ஏற்றுக்கொள்ள வதன் மூலமோ அல்லது மாநிலத்தின் தேவைகளுக்கேற்றவாறு மாதிரி சட்டமுன்வடிவின் வகை முறைகளுக்கிணங்கியவாறு நடைமுறையில் உள்ள சட்டத்தை வகைமுறைகளை திருத்துவதன் மூலமோ, மாநில கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தினை மாற்றியமைக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. கவனமான பரிசீலனைக்குப் பின்பு, தொழிலாளர்களின் நலனைக்  கருத்தில் கொண்டும் தொழிலா ளர்கள் பணிபுரியும் இடத்தில்  குடிநீர்,  கழிப்பிடம் மற்றும் முதலுதவி வசதிகளை உறுதிப்படுத்த 1947 ஆம்  ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும்  நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதெனவும், அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது  என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மாநில அரசும் தொழிலாளர் நலத்துறையும் கொண்டு வரும் இந்த சட்டத்திருத்த மசோதாவை முழு மையாக வரவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி, “ஆண்க ளுக்கும் பெண்களுக்கும் தனித்தனி யாக கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்ற குழுத் தலைவர் டி.ராமச் சந்திரன், தனது பெயரில் கொடுத் துள்ள திருத்தத்தை முன்மொழிவ தாக கூறினார்.