states

அதிகரிக்கும் பெண் கருக்கொலை; கருமுட்டை விநியோகத்தை தடுத்திடுக!

சென்னை, ஜூன் 6- அதிகரிக்கும் பெண் கருக்கொலை மற்றும் கருமுட்டை விநியோகத்தை தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்க ளன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்  டங்களில் சட்டவிரோதமாக பாலின தேர்வின் அடிப்படையில் பெண் கருக் கலைப்பு நடந்  துள்ளதாகவும், 7 பேர் கொண்ட கும்பல் கைது  செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. ஸ்கேன் மையங்கள், மருத்து வர்கள் உட்பட அனைத்து அமைப்புகளையும் கண்காணிப்பதற்கு PC & PNDT சட்டம் வழி வகை செய்தாலும் இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கரு முட்டை வணிகம் நடந்த செய்திகள் வெளிவந்  துள்ளன. 16 வயது சிறுமி கொடுமைப்படுத்தப் பட்டு, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கரு முட்டைகள் உருவாக்கப்பட்டு, தனியார் மருத்து வமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அந்த சிறுமியின் தாயும் ஈடுபட்டுள்ளார். இதிலும் அரசின் சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றிய செய்திகள் வெளிவருவது குறை வாக இருந்தாலும் கருமுட்டை வணிகம் பரவ லாக நடப்பதாகவே தகவல்கள் வருகின்றன. வணிக ரீதியான வாடகை கர்ப்பப்பை முறை (surrogacy) தடை செய்யப்பட்டுள்ளது. கரு முட்டை வணிகம் குறித்து சட்டங்கள் எதுவும் இல்லாத சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஈரோடு சம்பவத்தில் வழிகாட்டுதலின் எந்த அம்ச மும் பின்பற்றப்படவில்லை. இந்தியாவிலும், தமிழகத்திலும் செயற்கை முறை கருத்தரிப்பு மையங்கள் ஏராளமாக நிறுவப்பட்டு வருகின்றன. மருத்துவ சுற்றுலா மையமாக (Medical tourism) இந்தியா விளங்கு வதால் சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை  அதிகரித்திருக்கிறது. கருமுட்டை வணிகம் என்பது பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் கடுமையான சுரண்டல்  மற்றும் வன்முறையாகும். செயற்கை ஹார் மோன்கள் செலுத்தப்பட்டு இயல்புக்கு கூடுத லாக கருமுட்டைகள் எடுக்கப்படுவதால் பெண்  ணின் உடல் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குடும்ப வறுமை இச்சுரண்டல் வலையில் விழ வைக்கிறது. குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை கள் எடுப்பது ஒருபுறமிருந்தாலும், இவற்றைத்  தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் அவசியம் தேவைப்படுகின்றன. எனவே, தமிழக அரசு கருவின் பாலினம் அறிவித்தல், பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தை (PC & PNDT) முழுமையாக தமிழ கத்தில் அமல்படுத்த வேண்டும். அதை கண்கா ணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை புனரமைத்து, அவற்றை முறையாக இயங்க வைக்க வேண் டும்.

பெண் கருக் கொலையை தடுக்க பொதுமக்  கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்  டும். சமூக செய்தி அடங்கிய ஊடக விளம்ப ரங்களை வெளியிட வேண்டும். குறிப்பாக பெண் சிசு / கருக் கொலை அதிகம் நடக்கும் மாவட்டங்க ளில் கூடுதல் கவனத்துடன் கொண்டு செல்ல  வேண்டும். பெண்கள் அமைப்புகள், தன்னார் வக்குழுக்கள் மூலமும் விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும். பெண் சிசு / கருக் கொலைக்கும், கருமுட்டை  விற்பனைக்கும் காரணமாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும்  மருத்துவர்கள், ஸ்கேன் சென்டர் உரிமையாளர் ஆகியோர் கடுமையான தண்டனைக்குள்ளாக் கப்பட வேண்டும். கருமுட்டை விற்பனையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, அச்சிறுமிக்கு கல்வி புகட்டி அவளது எதிர்கால வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.