சேலம்,ஏப்.4- சேலம் மாவட்டத்தில் ஏராளமான தேங்காய் மண்டிகள் உள்ளன. இங்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேங் காய்கள் விற்பனைக்குவருகிறது. முழு மட்டையுடன் மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் தேங்காய்களில், பின்னர் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேங்காய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்ப தால், தேங்காய் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.