states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் தொடர்பான விசாரணை திங்கள்கிழ மைக்கு (செப்டம்பர் 19) ஒத்தி வைக்கப்பட்டுள் ளது.

வெளிநாட்டில் மருத்து வம் படித்து வருவோரை இந்திய கல்லூரிகளுக்கு மாற்ற தேசிய மருத்துவ ஆணையமும் அனுமதி தரவில்லை. முக்கியமாக இந்திய மருத்துவ கவுன் சில் சட்டப்படி வெளி நாட்டில் மருத்துவம் படி த்தவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடி யாது என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்.

தெலுங்கானா மாநி லத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்டுகிறது அம்மாநில அரசு.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற் றும் உறுப்பினர்கள் நீக்கத் தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கல்வியை மாநிலப் பட்டி யலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றி யதை எதிர்த்து திமுக எம் எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க 3 நீதி பதிகள் கொண்ட அமர் வை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

 

 

;