states

மதச்சார்பின்மையையும், சகோதரத்துவத்தையுமே அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது!

அதிரடி காட்டிய கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு

புதுதில்லி, அக். 22 - வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுபவர் கள் மீது மாநில அரசு நிர்வாகங்கள் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.  மேலும், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகங்கள் தீவிரமாக எடுத்துக் கொள் ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை யை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அதிரடி காட்டியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொ டர்ந்து வெறுப்பைக் கக்கும் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் ஈடுபடுபவர் கள் மீது ‘உபா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கு மாறும் ஷாகீன் அப்துல்லா என்ற பத்திரிகையா ளர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். “நாடு முழுவதும் முஸ்

“நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சுகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன; ஆளும் (பாஜக) கட்சியினரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவுடன் இச்செயல்கள் நடைபெறு கின்றன. இந்த விவகாரத்தில் சுதந்திரமான, நம்பத் தகுந்த, பாரபட்சமற்ற விசாரணை மேற் கொள்ளவும், தவறிழைப்பவர்கள் மீது, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உத்த ரவிட வேண்டும்” என்று ஷாகீன் அப்துல்லா மனுவில் வலியுறுத்தியிருந்தார். தில்லி சுந்தர் நாக்ரியில், அக்டோபர் முதல் வாரத்தில் மணீஷ் என்பவர் சிலரால் படு கொலை செய்யப்பட்டார். அப்போது மணீஷ் படு கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கி றோம் என்ற பெயரில், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் உள்ளூர் இந்துத்துவா அமைப்புகள் ‘விராட் இந்து சபை’ என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தின. இந்தக் கூட்டத்தில், பாஜக பர்வேஷ் வர்மா எம்.பி., எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், சுரேந்திர ஜெயின் ஆகியோர் முஸ்லிம் களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தனர்.

பாஜக  எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், “நாங்கள் ஜிகாதிகளைக் கொல்வோம். எப்பொழுதும் அவர்களைக் கொல்வோம். லோனியில் இருந்து 50 ஆயிரம் ஆட்களை வர வழைப்போம்” என்றார். பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசுகையில், “குறிப்பிட்ட சமூகத்தினரை (முஸ்லிம்களை) முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். எங்கு அந்த குறிப்பிட்ட இன மக்களை பார்க்கிறீர்களோ அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்களிடம் வியாபார ரீதியில் எந்த பொருட்களையும் வாங்கக் கூடாது” என பர்வேஷ் வர்மா இனவெறியைத் தூண்டினார். இந்த விவகாரங்களை ஒட்டியே ஷாகீன் அப் துல்லா தனது மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.  “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத் தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், ‘வெறுப்புப் பேச்சுகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இஸ்லாமியர்க ளுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, அக்டோபர் 9-ஆம் தேதி மீண்டும் புதுதில்லியில் அரங்கேறி யுள்ளது. அதன் காரணமாகவே, தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்த வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில அரசு நிர்வாகங்கள் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை சம் பந்தப்பட்ட மாநில நிர்வாகங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக் கும் என்றும் கடுமையாக கூறியுள்ளனர். உத்தர வில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: “இந்திய அரசமைப்புச் சட்டமானது, மதச் சார்பற்ற தேசத்தையும் குடிமக்களிடையே சகோ தரத்துவத்தையும் தனிநபர்களின் கண்ணியம் உறுதி செய்யப்படுவதையும் வலியுறுத்துகிறது. தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, முகப்புரையில் இடம்பெற்றுள்ள வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்றாகும். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நல்லி ணக்கத்துடன் வாழ முடியாத பட்சத்தில், சகோத ரத்துவம் எங்கே நிலவும்? எனவே நாட்டில் வெறுப்புச் சூழல் நிலவி வருகிறது என்ற மனு தாரரின் புகார் மிகவும் தீவிரமான பிரச்சனை. ஜனநாயகமும் மத நடுநிலையும் கொண்ட நாடான இந்தியாவில் இதுபோன்ற பேச்சுக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற பேச்சுக்கள் இந்துக்களுக்கு எதிராகவும் பேசப் படுகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். 

டுக்க பல்வேறு சட்டப் பிரிவுகள் இருப்பதாக மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ளார். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நி லையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமை களைப் பாதுகாக்கவும் இந்த நீதிமன்றத்துக்கு கடமை உள்ளது. அந்த வகையில், வெறுப்பு ணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மதத்தைப் பொருள்படுத்தாமல் உரிய நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அப்போதுதான் தேசத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை காக்க முடியும். இது 21 ஆம் நூற்றாண்டு. இப்போது நாம் கடவுளை எவ்வளவு தூரம் தாழ்த்தியுள்ளோம்? அரசியல் சாசன சட்டப்பிரிவு 51 ஏ-வானது நமக்கு கொஞ்சம் அறிவியல் சிந்தனையும் வேண்டு மென்று வலியுறுத்துகிறது. ஆனால் நாம் மதத்தின் பெயரால் என்ன செய்து வைத்துள் ளோம். இது மிகவும் துயரமானது. உத்தரப்பிர தேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் உடன டியாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் வருமென்று காத்திருக்கக் கூடாது. தாமாக முன்வந்து கிரிமினல் வழக்கு பதிந்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 

இதுதொடர்பாக, தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத் திற்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவ டிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” இவ்வாறு நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம், ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற பெண்ணும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்திருந்தார். அந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி எஸ்.ஆர். பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, “மனு தாரர் தமது மனுவில் வெறுப்புப் பேச்சுக்களால் தேசத்தின் ஒட்டுமொத்த சூழல் மீதும் கறைபடி யும் எனக் கூறியுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்தச் சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரச்சாரங்க ளை தடுக்க வேண்டும் என்று அவர் கூறுவது சரியானதே. அதனை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களும் இருக்கலாம். அது ஏற்கத்தக்க தாகவும் இருக்கலாம். ஆனால், மனுவில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே தெளிவாக ஆதாரங்களு டன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லா மல் 58 வெறுப்புப் பிரச்சார சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாக பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. பெரும்பாலான சம்பவங்களுக்கு விவரங்கள் இல்லை. யார் பேசியது? வழக்குப் பதியப்பட்டதா என்ற விவரமும் இல்லை” என்று தெரிவித்தனர். “இது தொடர்பாக மனுதாரர் மேலும் தகவல்க ளை இணைத்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் உத்தர விட்டிருந்தனர். இந்நிலையிலேயே வெறுப்புப் பேச்சு விவகாரத்தில், கே.எம். ஜோசப், ரிஷிகோஷ் ராய் அமர்வு அதிரடியான உத்தரவைப் பிறப் பித்துள்ளது.