சென்னை,மார்ச் 1- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது 70 வது பிறந்ததினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, பெரியார் திடலுக்கு சென்றார். அங்கு பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா அறிவாலயத் தில் தொண்டர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை முதல்வர் கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்க ளுக்கு மஞ்சள்பையுடன், மரக்கன்று கள் வழங்கப்பட்டது.
மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் !
இதனைத் தொடர்ந்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்றார் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டு வந்தவர்களுக்கு மஞ்சள் பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்பீர் நாளை நலமாக” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டு கள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப் புடன் சேவையாற்றிடவும் வாழ்த்து கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், “நாட்டிற்கு சேவை யாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கி யமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்து கிறேன்”என்று தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கி யத்துடனும் வாழ மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தலைவர்கள்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் ஆர். நல்லக் கண்ணு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், பாமக தலைவர் இரா. அன்புமணி ராமதாஸ், தேமுதிமுக தலைவர் விஜயகாந்த், மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கள் தெரிவித்தனர்.