சென்னை, பிப்.11- கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டன. இது மட்டுமில்லாமல், 56 ஆயிரம் குடிசை வீடுகள், 30 ஆயிரம் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதை யடுத்து தமிழக அரசு சார்பாக இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் கஜா புயலால் இடிந்த வீடுகள், பயிர் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 இல் கஜா புயலால் பாதிக்கப் பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒருவேளை இழப்பீடு கிடைத் திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித் தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசுதான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.