விருதுநகர், செப்.21- நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு முறையாக வழங்கிட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து, தமிழக முதல்வருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியதாவது : தமிழக அரசின், மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் வெளிப்படையாக பணி மாறுதல் நடை பெறுகிறது. எனவே இதேபோல் நெடுஞ்சாலைத்துறையி லும் வெளிப்படையான கலந்தாய்வு முறையில் பொறியா ளர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்.
ஒரே வட்டத்தில் 10 வருடங்கள் பணிபுரிந்த பொறியா ளர்களுக்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் மூலம் கலந்தாய்வு நடத்தி அவரது பரிந்துரையின் பேரில் பணிமாறுதல் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் ஒரே வட்டத்தில் பணி நிறைவு செய்யாத பொறியாளர்களை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் மூலம் கலந்தாய்வு செய்து அவரது பரிந்துரையின் பேரில் பணிமாறுதல் செய்ய வேண்டும். 3 வருடங்கள் ஒரே இடத்தில் பணி நிறைவு செய்தவர்க ளை கண்டிப்பாக பணியிட மாற்றம் செய்தல் வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்யாதவர்களை பணியிட மாற்றம் செய்தல் கூடாது. ஒரு வருடம் பணி நிறைவு செய்தவுடன் விருப்ப மாறுதல் கோரும் பொறியாளர்களுக்கு அவர்கள் கோரும் இடம் காலியாக இருந்தால் மட்டும் அந்த இடத்திற்கு மாறுதல் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.