states

முதல் முறையாக 2 பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை

காஞ்சிபுரம், டிச.23- கர்ப்பப்பை பிரச்னைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத  நிலை வரும்போது செயற்கை முறையில் கருத்தரித்தல், வாடகைத்  தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத் தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்பு  மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை கள் செய்தும் மருத்துவர்கள் சாதனை  படைத்துள்ளார்கள்.  சென்னை அருகே  பெரும்பாக்கத்திலுள்ள தனி யார் மருத்துவமனையில் தமிழ கத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒரு வரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடி யாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்து வர்கள் பிறவியிலேயே இருவருக் கும் கர்ப்பப்பை இல்லாமல் போன தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கியிருக்கிறார்கள். வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.

அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகி யவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர். கருப்பை தானமாக கொடுத்த இருவரும் 54 மற்றும் 56 வயதுடை யவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு  அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை  அகற்றப்பட்டு இரண்டு பெண்க ளுக்கும் பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது. இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை  சேர்ந்த மருத்துவர் ஜிரிபு ரோனெக்  என்பவர் இந்த அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாக செய்து முடித்துள் ளார். இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள் ளாது. அதை தவிர்க்க விலை  உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும். அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறை யில் கருமுட்டையை உருவாக்கி  கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக் கப்படும். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்படும். இந்த  மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை  கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் முதல் முறை யாக கர்ப்பப்பை மாற்று அறுவை  சிகிச்சையை வெற்றிகரமாக செய் துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.