சென்னை, செப். 10 - சென்னை குரோம்பேட்டையில் மாநகர் போக்குவரத்து கழகம் நடத்தும் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்களின் குழந்தைகள் படிக்க முன்னுரிமை வழங்கப்படும். எஞ்சிய இடங்க ளில் வெளி மாணவர்கள் அனு மதிக்கப்படுவார்கள். தற்பொழுது, 2022-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பணியாளர்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெறுகிறது. இதன்படி, ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்படும். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெற ‘முதல்வர், மாநகர் போக்குவரத்துக் கழகத் தொழிற்பயிற்சி நிலையம், மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண் 044-29535177, கைபேசி எண் 9445030597’ என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மின்னஞ்சல்: mtciti591@gmail.com இந்த விண்ணப்ப படிவத்தினை www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.