states

தில்லி மதுபான வழக்கு விவகாரம் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ஹைதராபாத், செப்.16- தில்லி மதுபான வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வெள்ளியன்று ஹைதராபாத்தில் சில இடங்களில் சோதனை நடத்தியது.  தில்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளியன்று அதிகாலை முதல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் முக்கிய இடங்களில் தில்லியைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  நாடு முழுவதும் 40 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். முன்னதாக சிபிஐ போட்ட எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் நகரில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சோதனையின் போது ராமச்சந்திர பிள்ளையின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

;