மதுரை,ஜூலை 3- மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கான விவரங்களை இணைய முகவரியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் உள்ள தாக மாணவர்கள், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. ஏழை, எளிய குடும்ப பெண்களின் கல்வியை ஊக்குவிக்க விதமாக திருமண உதவிக்காக திமுக ஆட்சியின்போது, கடந்த 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி யுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோ றும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டப்பயணிகளுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் சேகரிக்கப்படுகிறது. இதற்காக புதிய இணையதள (ஸ்டூடென்ட் லாக்கின்) முகவரி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் ‘ தமிழ் இலக்கியம் ’ உட்பட ஓரிரு பாடநெறிக்குள் (பாடப்பிரிவு) உள்ளே நுழைய முடியாத நிலை ஓரிரு நாளாகவே தொடர்கிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியாத சூழலால் உயர் கல்விக்கான உதவி தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் மாணவர்கள், பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களை அணுகி கேட்டபோது, சமூக நலத்துறை மூலமே இத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய் வதற்கான நடவடிக்கையை அத்துறை சார்ந்த அதிகாரிகளே ஏற்பாடு செய்துள்ள னர். இது தொடர்பாக எழும் சந்தேகம், பிரச்சனைக்கு அத்துறை அதிகாரி களிடமே புகார் தெரிவிக்கவேண்டும் கல்லூரிகளில் தரப்பில் கூறுகின்றனர். ‘‘உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு நடவடிக்கை எங்களது துறை சார்பில் எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக நாளை (திங்கள்)கேளுங்கள் சொல்கிறோம்,’’ என்று சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் தெரி வித்துள்ளார்.