states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்:  56 பேர் பலி 

புதுதில்லி, நவ. 21 - இந்தோனேசியாவில் திங்களன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள் ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 56 பேர் பலியாகி இருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் முதற் கட்டத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவா-தான் இந்த நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. மேற்கு இந்தோ னேசிய நேரப்படி (WIT) பகல்  1:21 மணியளவில் பெங்குலு  என்ற பகுதியில் இருந்து தென் மேற்கே 202 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் முதலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு ஜாவாவின் சியாஞ் சூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. மேற்கு ஜாவாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் இது உண ரப்பட்டுள்ளது. இருப்பினும், ஜகார்த்தாவில் உயிரி ழப்போ காயமோ எதுவும் பதிவாகவில்லை.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு: நவ.30க்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர்   மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவ காரத்தில் விசாரணையைத் தள்ளி வைக்கக் கூடாது என்றும், நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக, திருத்தப்பட்ட அதிமுக விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது என்றும்  எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். எடப்பாடி  பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என வைர முத்து தரப்பு வழக்கறிஞர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணை யை நவம்பர் 30-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

பீகாரில் திருமண ஊர்வலத்தில் புகுந்த வாகனம்: 12 பேர் பலி

பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் திருமணத்தையொட்டி நடைபெற்ற சடங்கின் ஒரு பகுதியாக ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சரக்கு வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மோதியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு-வும், பிரதமர் மோடியும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் ஆதிவாசிகள்தான்: ராகுல்

இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் ஆதிவாசிகள்தான். ஆனால், அவர்களை பாஜக-வோ வனவாசிகள் என அழைக்கிறது. அவர்களிடம் இருந்து, நிலங்களை பறித்து அவற்றை 2 முதல்  3 தொழிலதிபர்களுக்கு வழங்கி உள்ளது. ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பதற்கோ, அவர்கள்  கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பாஜக-வுக்கு விருப்பம் இல்லை என காங்கி ரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார். மேலும், “காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த  போது கொண்டு வந்த பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச்  சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்  படுத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கும் ராகுல் காந்தி, “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருகிற போது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம்” என்றும் கூறியுள்ளார்.

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு மறுநாளே தேர்தல் ஆணையர் பதவி!

1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல். ஒன்றிய அமைச்ச ரவை அலுவலக செயலாளர் பதவியிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்  காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் ஒருமாதத்திற்கு முன்ன தாகவே அவர் விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில், விருப்ப ஓய்வுபெற்ற மறுநாளே, நரேந்திர  மோடி அரசால் அவர் இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு- தற்போது அவர்  பதவியும் ஏற்றுக் கொண்டுள்ளார். 2027 டிசம்பர் வரை இப்பதவியில் இருக்கப்போகும் அவர், 2025-இல் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பணி ஓய்வுபெற்ற பிறகு, இவரே அடுத்த தலைமை தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் 125 தொகுதிகளுக்கு காங்கிரஸ் இலக்கு: கெலாட்

“குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 125 தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருவ தாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரி வித்துள்ளார். கொரோனா மற்றும் பொருளாதாரத்தை எதிர்கொண்டதில் பாஜக தவறு செய்துள்ள தால், மக்களின் மனநிலை அவர்களுக்கு எதிராக உள்ளது. காங்கிரஸ் 125 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நினைக்கிறோம். குஜராத்தில் பாஜக அழிக்கப்பட்டு வருவதாலேயே, மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி குஜராத் வருகிறார்கள். வாரந்தோறும் அவர்கள் இங்கு வருவது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது” என்றும் கெலாட் விமர்சித்துள்ளார்.

ஆதார் அட்டை வைத்திருந்தால் ஒன்றிய அரசு கடன் தருமா?

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒன்றிய அரசு தலா ரூ. 4 லட்சத்து 78 ஆயி ரத்தை கடனாக வழங்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இணைக்கப்  பட்ட டிஜிட்டல் போஸ்டர் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் துளியும் உண்மையில்லை என்று ஒன்றிய அரசின் பத்திரிகை தக வல் அலுவலகம் (PIB) தெரிவித்துள்ளது. தயவுகூர்ந்து இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், இதுபோன்ற புரளிகளைப் பரப்புவது குற்றம் என்றும் பிஐபி குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற ஒரு தகவல் கடந்த ஆகஸ்ட் மாதமும் பரவி யது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவி நிரந்தரமில்லை; மோடி இதை உணர வேண்டும்!

“அக்னிபாதை ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி  நிரந்தரம் இல்லை, அப்பதவியில் இருந்து ஒருநாள் விலக வேண்டுமென்பதை பிரதமர்  மோடி புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவார்கள். நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான்  உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளை ஞர்களின் இயக்கமும் தொடங்கும்” என மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசி யுள்ளார்.

இந்தியா என்ற இந்த நாடு நேருவின் நிலம்: சஞ்சய் ராவத்

“வீர் சாவர்க்கர், சுபாஷ் சந்திரபோஸ், பண்டித ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் மகாத்மா காந்தி உள்பட இந்த நாட்டிற்காக சுதந்திர போராட்டத்தில் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்த அனைவரின் மீது முழு நாடும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பண்டித ஜவஹர்லால் நேரு ஏராளமான பங்களிப்புகளை செய்தார். இல்லை யெனில் நாடு பாகிஸ்தானை போல மாற அதிக நேரம் எடுத்திருக்காது. இந்த நாடு பண்டித ஜவஹர்லால் நேருவின் நிலம்” என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

மதங்கள் அல்ல; மனிதர்கள்தான் தீமை புரிகிறார்கள்: பரூக் அப்துல்லா!

“இந்தியாவில் 80 சதவிகிதம் பேராக உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக அரசியல்  உள்நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. எந்த மதமும் தீங்கானது கிடை யாது. அந்தந்த மதங்களில் இருக்கும் தீய மனிதர்கள்தான் தீமையை விளைவிக்கின்றனர். கடவுள்  ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் வலிமை. காஷ்மீரில் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது, அவை எங்கே? எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் வேலையில்லாமல் உள்ளனர்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.21- கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக் குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனு மதிக்கலாமா என்பது தொடர்பான கருத் துக்களுடன், நவம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனு மதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தர விடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்  குமார் முன்பு திங்களன்று (நவ. 21) மீண்  டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி  முழுமையான அளவில் எல்.கே.ஜி முதல் அனைத்து வகுப்புகளை துவங்கத் தயா ராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்  யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்  டும் திறப்பது தொடர்பாக அரசின் கருத்து களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டி யுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துகளுடன் நவம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தர விட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

யுஜிசி அறிக்கைக்கு திராவிடர் கழகம்  கடும் கண்டனம்

சென்னை,நவ.21- கல்வி நிறுவனங்களில் வேதம், மனுஸ்மிருதி, இதிகாசம், புராணங்கள் குறித்து சட்ட நாளான நவம்பர் 26 அன்று  கருத்தரங்குகளை நடத்துமாறு பல்கலைக்  கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள் ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அரசமைப்புச் சட்ட முகப்புரை யில் ‘‘அரசு முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாகவே இயங்கும் என்பதும்  பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அடிப்படையான இக்கொள்கைகளே இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மாற்றக் கூடாத அடிக்கட்டுமானம் என்றும் பறைசாற்றப்பட்டுள்ளது. அரச மைப்புச் சட்ட நெறிக்கு முற்றிலும் முர ணான முயற்சிக்கு முன்னோட்டம் காணு வதற்கான ஓர் எடுத்துக்காட்டு பல்கலை  கழக மானியக்குழுவின் அறிக்கையாகும்.  மன்னராட்சியின் மேன்மைகள், வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்தி ரம், இதிகாசம், புராணங்கள் ஆகிய  சமஸ்கிருத நூல்களில் காணப்படும் ‘ஜனநாயகச் சிந்தனைகள்’ என்பன வற்றை கருப்பொருளாகக் கொண்டு கூட்டங்கள் நடத்த வேண்டுமென்று யுஜிசி அறிவித்திருப்பதை எதிர்த்து மாணவர்கள் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும். நவம்பர் 26 ஆம் நாளை சனாதன  நாளாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வின் திட்டங்களை முறியடிக்க ஒன்று திரள் வோம்” என்றும் கி.வீரமணி கூறியுள்ளார். 

அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் கிஷோர் கே.சாமி கைது

சென்னை, நவ. 21- பாஜக ஆதரவாளரும், சமூக ஊடக வியலாளருமான கிஷோர் கே.சாமி, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் மழை வெள்ளப் பாதிப்பு பணிகளை விமர்சிக்கும்  வகையில் நவம்பர் 1ஆம் தேதி ட்விட்டரில்  கருத்து பதிவிட்டார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கிஷோர்  கே.சாமி மீது வழக்கு பதிவு செய்து  விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது.  நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதி களில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜ ராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனி டையே, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே.சாமி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி  அல்லி, விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாத வருக்கு முன்ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகிவிடும் எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் புதுச்சேரியில் தங்கியிருந்த கிஷோர் கே.சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவர்  குடும்பத்துக்கு நிதியுதவி

சென்னை, நவ. 21- முல்லை பெரியாறு கால்வாயில் மூழ்கி  உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத் துள்ள அறிக்கையில் அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப்  பெரியாறு கால்வாயில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்த யோகேஸ்வ ரனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரி வித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மின் பற்றாக்குறைக்கு தயாராகுங்கள்! மக்களை மிரட்டும் ஜெர்மனி அரசு

பெர்லின், நவ.21- வரும் குளிர்காலத்தில் கடுமையான மின்சார பற்றாக்குறை இருக்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தன் நாட்டு மக்களுக்கு ஜெர்மனி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேரழிவு மேலாண்மைப் பிரிவின் தலைமை அலுவலரான ரால்ஃப் டீஸ்டர், ‘‘குளிர்காலத்தில் பெரும் அளவில் மின்வெட்டு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மின் விநியோகத்தில் பல இடங்களில் தடைகள் ஏற்படும். ஒட்டுமொத்தத் தேவைகளைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது மின்தடைகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது. போதுமான அளவு எரிபொருள் இல்லாததால் இந்த நெருக்கடியை நாம் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’’ என்றார். ஆனால், இந்த மின்வெட்டுகள் இப்போதைக்கு குறுகிய நேரத்திற்கே இருக்கும் என்றும், நீண்ட நேரத்திற்கான மின்தடைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்றும் உறுதி அளித்திருக்கிறார்கள். ஒருவேளை நிலைமை கைமீறிப் போய்விட்டால், அதை எதிர்கொள்வதற்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வது அவசியம் என்றும் டீஸ்டர் எச்சரித்துள்ளார். புவியரசியலில் ஏற்படும் பதற்றங்கள் வருங்காலத்திலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டும் டீஸ்டர், ‘‘இதில் வருத்தத்துக்குரிய அம்சம் என்னவென்றால் இப்படியெல்லாம் சிக்கல்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதாகும்’’ என்கிறார். அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மின்சாரப் பற்றாக்குறை பற்றி ஜெர்மனியின் மின்துறை நிறுவனங்கள் எச்சரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.