states

திண்டுக்கல் ஆட்சியர், காவல்துறைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்

சென்னை, மே 17- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்  மற்றும் காவல்துறை விரைந்து செயல்பட்டு சாதிமறுப்பு தம்பதியி னரைப் பாதுகாத்திட  வேண்டும்  என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின்  மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு பொதுச்செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:  திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்  தூர் வட்டம் பிலாத்து கிராமம் விஷ்ணுபிரியா (வயது 24) என்பவ ரும் அதே கிராமம்  அஜீத்குமார் (வயது 25) என்கிற தலித் இளைஞ ரும் இரண்டு தினங்களுக்கு முன்னர்  திருமணம் செய்துகொண்டுள்ள னர். தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்ட  இத்தம்பதியர்  திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மே 16 அன்று அனுப்பி வைக்கப்பட்ட னர்.  அங்கு வருகை தந்த திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளரிடம் பெண்ணின் பெற்றோர், பெண் ணுக்கு மன ரீதியான பாதிப்பு இருப்ப தாக தெரிவித்ததை அவர் ஏற்றுக் கொண்டு, மணமகனிடம் இருந்து விஷ்ணுபிரியாவைப் பிரித்து மருத்  துவ பரிசோதனைக்கு அனுப்பி யிருக்கிறார்.

சட்டப்படி   திருமண வயதை அடைந்தவர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு முறையிட்டால், அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான பாதுகாப்பை உறு திப்படுத்துவதுதான் காவல்துறை யின் சட்டப்படியான கடமை. அவ்  வாறு செய்யவில்லை எனில் குறைந்தபட்சம் இதனை வழக்காகப்  பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கலாம். ஆனால் இரண்டையும் செய்யாமல், நீதிமன்ற உத்தரவு ஏதும் பெறாமல் பெண்ணுக்கு மருத்துவப்பரிசோதனை செய்வ தற்கு காவல் துறையினருக்கு எந்த விதமான சட்டப்பூர்வமான உரிமை யும் இல்லை.  எனவே உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மாவட்ட  ஆட்சியரும் தலையிட்டு விஷ்ணு பிரியாவும் அஜீத்குமாரும் இணைந்து வாழ்வதற்கு சட்டப்படியான ஏற் பாடுகளை செய்ய வேண்டும் . இவ்வாறு அதில் வலியுறுத்தி யுள்ளனர்.  போலீஸ்  ஐ.ஜி.யிடம் முறையீடு சாதி மறுப்பு திருமணம் செய்த திண்டுக்கல் மாவட்ட இளம் தம்பதி யரை பாதுகாக்க தமிழ்நாடு காவல்  துறை முன்வர வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப்  பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. யிடம் மனு அளித்துள்ளார்.