states

தில்லியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம்: முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்

சென்னை,ஏப்.16- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றியதைபோல் தில்லி துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறை வேற்றப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதி யுள்ள கடிதத்தில் தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள் ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வதை கண்டித்தும், மசோதாக்களுக்கு ஆளு நர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக் கெடுவை நிர்ணயிக்க ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியு றுத்தி கடந்த 10 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றிய தீர்மானத்தைபோல், மற்ற மாநிலங்களிலும் தீர்மானம் நிறை வேற்ற வேண்டுமென்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதல்வர் களுக்கு மு.க. ஸ்டாலின் கடந்த 12 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். ஆளுநர் விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கூட்டாட்சி தத்து வத்துக்கு எதிராக மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் செயல்படுகின்றனர். பாஜக ஆட்சியில்  இல்லாத மாநிலங்களில் அரசு மசோதா க்களை ஆளுநர்கள் காலவரையன்றி கிடப்பில் போடுகின்றனர். அதிகபட்சமாக தில்லி துணை நிலை ஆளுநர், மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்குகூட ஒப்புதல் தராமல் தடுத்து நிறுத்தினார். கல்வி, சுகாதா ரம், குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எங்கள் அரசை செயல்படவிடாமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இது போன்ற பனிப்போரை ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு, மாநில அரசு மீது  தொடுக்கிறது. இதற்கு எதிராக ஒற்றைக் குரலில் இருக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். நானும் விரைவில் தில்லி சட்டப்பேரவையில் இது போன்ற  தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கி றேன்” என்று தெரிவித்துள்ளார்.