குமரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பு
நாகர்கோவில், ஏப்.5- குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிக ரித்துக் கொண்டு செல்கிறது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு இரட்டை இலக்க எண் ணாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொண்டுள் ளனர். பெரும்பாலும் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ் வாய்க்கிழமை ஒரே நாளில் 49 பேருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதில் 14 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள், 10 பேர் குழந்தைகள் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளனர். பெண் குழந்தைகள் 8 பேரும் ஆண் குழந்தைகள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவி ரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 பேரும், குருந்தன்கோடு ஒன்றி யத்தில் 3 பேரும், மேல்புறத்தில் ஒருவரும், நாகர்கோவிலில் 6 பேரும், ராஜாக்கமங்கலம், தக் கலையில் தலா 4 பேரும், திரு வட்டாரில் 5 பேரும், தோவாளை யில் ஒருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் 100 படுக்கையுடன் கொரோனா வார்டு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. தக்கலை மற்றும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.
காவிரிப் படுகையை புதை குழிகளாக மாற்றத் துடிப்பதா?
சென்னை, ஏப்.5- தமுஎகச மாநிலத்தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுவதும் 101 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை இந்திய ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறி விப்பில், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி மண்டலம் என்கிற தனிச்சிறப்பு வாய்ந்த காவிரி டெல்டா மாவட்டங்க ளில் மூன்று சுரங்கங்களைத் தோண்டப்போவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்றிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டிலும் தொல்காலந்தொட்டு செழித்துப் பரவியுள்ள காவிரிப்படுகையை புதைகுழி களாக மாற்றத் துடிக்கும் ஒன்றிய அரசின் இம்முடிவை தமுஎகச கண்டிக்கிறது. ஏற்கெனவே நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் கடலூர் மாவட் டம் முழுவதுமே பாதிப்படைந்துள்ள நிலையில், அதனை யடுத்துள்ள நிலப்பரப்பையும் பாழ்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேடு, விளைநிலமும் நிலத்தடி நீரும் பாழாகுதல், உணவு உற்பத்திப் பரப்பு குறைதல், வாழ்வா தாரம் இழப்பு என பல்வேறு வகையிலும் பாதிப்பினை உருவாக்கக்கூடிய இத்திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் விளைநிலங்களை- குறிப்பாக காவிரி டெல்டா பகுதியைச் சூறையாடத் துடிக்கும் ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதி ராக தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாடு அரசும் மேற்கொண் டுள்ள நிலைப்பாட்டில் தமுஎகச இணைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்
சென்னை, ஏப்.5- கேள்வி நேரத்தின்போது சிவகங்கை தொகுதி அதிமுக உறுப்பினர் செந்தில் நாதன், சிவகங்கை மிக வறட்சியான மாவட்டமாக உள்ளது. இங்குள்ள விவசாயிகளின் நீர் ஆதாரம் நிலத்தடி நீர் தான். விவசாயத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேர மின்சாரம் என்பது 24 மணி நேரம் மும்முனை மின்சாரமாக வழங்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப் பணி முடிந்ததும் விரைவில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், சிவகங்கை தொகுதியில் 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றார்.
செயற்கைக் கோளை ஏவுகிறது கென்யா
நைரோபி, ஏப்ரல் 5- விண்வெளியில் இயங்கக்கூடிய செயற்கைக் கோள் ஒன்றை ஏவுவதற்கு ஆப்பிரிக்க நாடு களில் ஒன்றான கென்யா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் மூலமாக டைஃபா-1 என்ற செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. கென்யாவின் பாது காப்புத்துறையும், விண்வெளி முகமையும் இணைந்து ஏப்ரல் 10 ஆம் தேதியன்று இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவு கிறார்கள். இந்த இரண்டும் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் திட்டம் ஒரு முக்கியமான சாதனையாகும். வளர்ந்து வரும் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு கென்யா கணிசமான பங்கைச் செலுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரையில், 13 நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியுள்ளன. இந்த நாடுகள் ஏவிய 48 செயற்கைக்கோள்களில் ஒன்றுகூட ஆப்பிரிக்க மண்ணில் இருந்து செலுத்தப்படவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் முதன்முறையாக எகிப்துதான் 1998 ஆம் ஆண்டில் செயற்கைக்கோளை விண்வெளி க்கு செலுத்தியது. அதைத்தொடர்ந்து எத்தியோப்பியா, அங்கோலா, தென் ஆப்பரிக்கா, சூடான் உள்ளிட்ட நாடுகள் செயற்கைக்கோள்களை அனுப்பின. தற்போது கென்யா செலுத்தும் டைஃபா-1 செயற்கைக்கோள் முழுக்க, முழுக்க கென்யாவின் பொறியியல் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதாகும். கென்யா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மண்ணில் இத்தகைய செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான ஏவுதளங்களை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. ஹாங்காங்கில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனத்துடன் சில ஆப்பிரிக்க நாடுகள் ஏவுதளம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன.
கேள்வி நேரத்திலிருந்து...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.5) நடந்த கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:
இந்து முன்னணியினர் ஆக்கிரமித்த நிலம் மீட்பு!
செங்கம் கிரி (திமுக): திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தை இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி மண்டபத்தை புதுப்பிக்க அரசு முன்வருமா? அமைச்சர் பி.கே. சேகர்பாபு: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரத்தை கடந்த 17 ஆம் நூற்றாண்டில் சுமார் 255 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்த பெண் சித்தர் அம்மணி அம்மாளும் கட்டுமானப் பணியாளர்களும் கோயில் வளாகத்தில் 108 தூண் மண்டபத்தில் வசித்தனர். அந்த மண்டபத்திற்கு அம்மணி அம்மாள் பெயர் சூட்டப்பட்டது.அந்த மண்டபத்தை அவரது பக்தர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், 1959 ஆண்டு இந்து சமய அறநிலையங்கள் துறையின் சட்டப்படி அறக்கட்டளை நிர்வகித்து வந்தது. இந்த நிலையில், 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அறக்கட்டளையை தங்கள் பெயரில் மாற்றம் செய்து அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது. அங்கு வீடுகளை கட்டிக்கொண்டதுடன் சமூகவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தது. இந்த ஆக்கிரமிப்பு விரிவடைந்துகொண்டே இருந்த நிலையில், இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த இடம் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது, ஆக்கிரமிப்பு இடத்தை முழுமையாக மீட்டெடுத்துள்ளோம். இடிபாடுகளை அகற்றும்போது மண்டபம் சேதமடைந்துள்ளது. எனவே, சிதலமடைந்த மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும்.
சாலைப் பணி!
அன்பழகன் (கும்பகோணம் தொகுதி திமுக) : ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலைப் பணி எப்போது முடிக்கப்படும். அமைச்சர் எ.வ.வேலு: முந்தைய அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பணி பத்தாண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தும் பல முறை கடிதம் மூலம் தெரிவித்திருக் கிறேன். ஒப்பந்தம் எடுத்தவர்களையும் அழைத்து பேசி யிருக்கிறோம். அடுத்த ஆண்டு (2024) ஜூன் மாதத்திற்குள் முடித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கில் அரசு கல்லூரி!
செல்லூர் ராஜூ அதிமுக: மதுரை மாநகரிலே ஒரே ஒரு அரசு கல்லூரிதான் இருக்கிறது. அதுவும் 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு தொடங்க வில்லை. மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி அமைத்து கொடுக்கப்படுமா? அமைச்சர் பொன்முடி: மதுரையை பொறுத்த வரை உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரி களாக ஏற்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தற்போது 7 உறுப்பு கல்லூரிகள் கல்லூரிகளாக மாற்றப்பட் டுள்ளது. எனவே, உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வருங்காலங்களில் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். நத்தம் இரா. விசுவநாதன் அதிமுக: நத்தம் தொகுதி யில் அரசு சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க அரசு முன்வருமா? அமைச்சர் பொன்முடி: முன்னாள் அமைச்சரின் கோரிக்கை நியாயமானதுதான். காரணம், முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த அந்தப் பகுதியில் அரசுக் கல்லூரி இல்லை என்பதால், தனியார் கல்லூரி களுக்கு கடந்த ஆண்டில் நத்தம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 3 ஆயிரம் இடங்களில் 2 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரி இருந்தால் மாணவர் சேர்க்கை பூர்த்தியாகியிருக்கும் ஆகவே, அரசு கல்லூரி அமைத்து கொடுக்க அரசு முன்னுரிமை கொடுக்கும்.
தண்டனை உறுதி!
ஜவாஹிருல்லா (மமக): பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன்வருமா? போக்சோ குற்ற வழக்கில் தண்டனை வழங்குவது காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்குமா? அமைச்சர் ரகுபதி: பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி ஏற்கெனவே 32 மகளிர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகள் தலைமையிலும் 33 கூடுதல் நீதிமன்றங்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமை யிலும் அமைக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கை விசாரணை செய்வதற்காக 14 நீதிமன்றங்கள் உள்ளது. இதுவரைக்கும் 50 விழுக்காடு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்காக அரசு வழக்கறிஞர்கள் துணைபோகமாட்டார்கள். குற்றவாளிகள் ஒருவரும் தப்பிக்கவிடமாட்டோம்.
மாநகராட்சி பகுதிகளில் பட்டா
கணபதி (மதுரவாயல் தொகுதி திமுக) : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு பட்டா கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஏற்பாடு செய்யுமா? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன்: 1962 ஆம் ஆண்டில் ஒரு சட்டம் போடப்பட்டது. அதில் பெல்ட் ஏரியாவுக்கு பட்டா வழங்கக்கூடாது என்று சொல்லப் பட்டுள்ளது. இந்த பெல்ட் ஏரியா என்பது அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பும் அதை உறுதி செய்வதாகத்தான் உள்ளது. இதை எப்படி செய்யலாம், எப்படி பட்டா வழங்க லாம், எத்தனை ஆண்டுகள் வாழ்கிறவர்களுக்கு வழங்க லாம், புதிதாக குடியிருப்பவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து சாதக பாதகங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பொறுமையாக தான் எடுக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரின் கவனத்து கொண்டு சென்று சாதக மற்றும் பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்யப்படும்.
உலகச் செய்திகள்
மே 14 ஆம் தேதியன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான பஞ்சாப்பில் நடக்க வேண்டிய தேர்தலை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தள்ளிப் போட்டது. இந்த முடிவுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி வழக்குத் தொடர்ந்தது. அதில், தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிககாவின் கலிபோர்னியா நகரில் தைவானின் தலைவர் டிசாய் இங்-வென்னைச் சந்திக்கப் போவதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவரும், குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவருமான மக்கார்த்தி தெரிவித்துள்ளார். இத்தகைய சந்திப்புகள் இருதரப்பு உறவுகளைக் கெடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை மீறியே மக்கார்த்தி, தைவான் தலைவரைச் சந்திக்கவிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் இராக்கில் இருந்து பத்து லட்சம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்று அவர்களது புள்ளிவிபரம் கூறுகிறது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் அதைத்தொடர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் அதிகாரம் ஆகியவை இந்த காணாமல் போகும் அவலத்திற்குக் காரணங்களாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.