states

பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை,ஏப்.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். சின்ன துரை, “கந்தர்வகோட்டை தொகுதி வடசேரிப் பட்டி ஊராட்சியில் நகர்ப்புற மக்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.  அந்த இடம் பள்ளிக்கூடம் கட்டு வதற்காக ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். அதே நேரத்தில், நகர்ப்புற மக்கள் என்றாலும் அந்த மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க கிரா மப்புற நிலத்தை தருகிறோம். நாங்கள்  கொடுக்கும்

10 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொள்ளலாம் என்றும் அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள். எனவே, கிராம மக்கள் சொல்லக்கூடிய இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்த வீட்டு  வசதித்துறை அமைச்சர் முத்துசாமி,“ அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் இடம் கிராமப்புறமாக இருந்தாலும் அந்த இடத்தில் அதை  பெற்றுக் கொள்வதற்காக கிராமத்தில் இருந்து வந்தாலும் சரி நகராட்சியில் இருந்து வந்தாலும் சரி வீடு பெற்றுக்  கொள்ளலாம். அதில் எந்த தடையும் இல்லை. இருந்தாலும் கூட, தற்போது  கட்டுமானப் பணிகள் நடந்து வரும்  இந்த இடம் மிகவும் அவசியமா னதாக இருப்பதால் பணிகள் துவக்கப் பட்டுள்ளது. அது எவ்வளவு தூரம் நடைபெற்று இருக்கிறது? எந்த வகை யில் இருக்கிறது? ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா? என்பதை ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.